சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஜோதிகா இப்படி மாறினார் – மீரா மிதுன் புதிய சர்ச்சை.

0
9258
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னரும் சேரன் மீது வைத்த பொய்யான குற்றச்சாட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி,விஜய், சூர்யா குறித்து சமீபத்தில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

- Advertisement -

அதில் விஜய் மற்றும் அவரின் தந்தை தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாஃபியா என்று கூறியிருந்தார். சூர்யாவிற்கு நடிப்புன்னா என்னனு கூட தெரியாது. நான் என்னுடைய ஷாட்டை ஒரே டேக்கில் முடித்து விட்டேன். ஆனால், அவர் 10 20 டேக் எடுத்தார். அவருக்கு சுத்தமா நடிப்பு திறமையை கிடையாது. என்னுடைய பகுதி அந்த படத்தில் இருக்க கூடாது என்று அவர் நீக்கிவிட்டார் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இவர் சூர்யாவின் மனைவி ஜோதிகா குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ஜோதிகாவின் கருப்பு பக்கம் பற்றி அனைவருக்கும் தெரியும். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் அவர் ஏதோ புனித பசு போல மாறி விட்டார் என்று கூறியுள்ளார் மீரா மிதுன்.

-விளம்பரம்-
Advertisement