ஊரடங்கில் அடங்காத மீரா மிதுன். அரை குறை ஆடையில் ஆண் நபருடன் போட்ட ஆட்டம்.

0
15410
meeramithunnew
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர்தான் நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்று இருந்தார். ஆனால், அழகி பட்டத்தை வைத்துக்கொண்டு இவர் செய்த பல்வேறு மோசடி செயல்களால் அவரிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது. ஆனால், தற்போதும் தான் ஒரு சூப்பர் மாடல் என்று உதார் விட்டு வருகிறார் மீரா மிதுன்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சையான ஒரு நபராக இருந்து வந்தார் மீரா மிதுன். மேலும் இவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீராமிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளிவிட்டார் என்று இவர் கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் மீராவின் சர்ச்சை குறையவில்லை. அடிக்கடி அரை நிர்வாண புகைப்படங்களையும் ஆண் நண்பருடன் மோசமாக ஆடிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

கேட்டால் அதற்கு பெயர் பஜாட்ட நடனம் என்று கூறி வந்தார் மீரா மிதுன். இந்த நிலையில் மீண்டும் ஆண் நபருடன் அரை குரை ஆடையில் நடனமாடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மீரா. ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் பல விதமான விடீயோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இப்போதும் மீரா மிதுன் அதே பழைய கவர்ச்சியை தான் பின்பற்றி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement