மீரா மிதுனுக்கு 50000 ஆயிரம் அனுப்பி சவால் விட்ட ரவீந்தர். மீரா மிதுன் கொடுத்த சவால்.

0
1049
- Advertisement -

தயாரிப்பாளர் ரவீந்திரன் பற்றி வனிதாவின் திருமண விஷயத்தில் நான் அனைவரும் பார்த்திருப்போம். சமீபத்தில் மீரா மிதுனும் தயாரிப்பாளர் ரவீந்திரனும் இணைந்து பேட்டி கொடுப்பதாக இருந்தது. ஆனால், மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்ததும் தயாரிப்பாளர் ரவீந்தரன் அந்த பேட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், தயாரிப்பாளர் ரவீந்தரனை கோலிவுட் மாஃபியா மிரட்டியதால் தான் அவர் பேட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியிருந்தார் மீரா மிதுன்.

-விளம்பரம்-

இந்தநிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரவீந்திரன் மீரா மனிதனை மட்டும் நேரில் கண்டால் கிழித்து தொங்க விட்டு விடுவேன் மேலும் அதற்கு பயந்து நான் ஏதோ பேட்டியில் பங்கு பெறவில்லை என்று சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறது. உன்னை நேரில் கண்டால் ஐம்பதாயிரத்தை கொடுத்து இனி நீ வாயைத் திறக்காது என்று சொல்லிவிடுவேன். மேலும் அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். ஆனால் ஒரு மீடியாவில் அமர்ந்து என்னிடம் அவர் பேட்டியில் நேருக்கு நேர் பேசத் தயாரா என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ரவீந்திரனின் இந்த பேட்டியை கண்ட மீராமிதுன் பேட்டியில் பங்கு பெறாமல் கோழைத்தனமாக ஓடி விட்டு இப்போது ஏன் ஏதோ தைரியமான ஆள் போல பேசுகிறீர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து இருந்த ரவீந்திரன் உண்மையாகவே மீராமிதுன் பெயரில் 50,000 ரூபாயை எடுத்து அதனை புகைப்படமாக எடுத்து மீரானுக்கு ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார்.

இதற்கு பதில் அளித்துள்ள மீரா மிதுன், யார் வேண்டுமானாலும் இப்படி போலியான ஒரு டிடியை உருவாக்கலாம். உங்களிடம் என்னுடைய விவரங்கள் இருக்கிறது அல்லவா? எனக்கு கால் செய்ய யார் உங்களை தடுக்கிறது. எந்த தேதியில் எந்த நேரத்தில் எங்கு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லுங்கள். நீங்கள் கெத்தாக இருந்தால் உங்களுடைய ஒர்த்தை காண்பியுங்கள். இதையெல்லாம் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் தான் நம்பி ஏமாறுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement