சோத்துல உப்பு போட்டு தான தின்ற , திருடி ஏன் இப்படி பண்ற ? – ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து மீரா மிதுன் கொடுத்த புதிய ஷாக்.

0
9141
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலத்தை விட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்து இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணிய மீராமிதுன் சமூகவலைதளத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் புகை பிடிப்பது, குடிப்பது , ஆண்களுடன் ஆபாச நடனம் போடுவது என்று என்னென்னவோ பதிவுகளை போட்டு பார்த்து விட்டார்.

இதையும் பாருங்க : ராஷ்மிகா ட்வீட்டிற்கு கமன்ட் செய்த முன்னாள் காதலர் – அசிங்கப்படுத்திய ராஷ்மிகா.

- Advertisement -

இருப்பினும் அம்மனிக்கு பிரபலம் கிடைத்த பாடில்லை. இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார். அப்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒருவழியாக விஜய் மற்றும் சூர்யா குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசியதால் இவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசி வருகிறார்.

நடிகர்களை மட்டுமல்ல தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகைகள் குறித்தும் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தை பதிவிட்டு வருகிறார் மீராமிதுன். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படத்தை பதிவிட்டு இவள் தன்னுடைய முகத்தை பயன்படுத்தி பிரபலம் அடைந்து வருகிறார் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் தான் பச்சை புடவை கட்டிக்கொண்டு நடித்தது போலவே இவரும் அதேபோல நடித்தார் கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா, திருடி நீ சோத்துல உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா என்று மோசமாக பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement