மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது – விஜய் சூர்யாவிற்காக களமிறங்கிய பாரதிராஜா.

0
2558
meera
- Advertisement -

கடந்த சில தினங்களாக மீரா மிதுன் தான் சமூக வலைத்தளத்தில் மிகவும்சர்ச்சையான ஒரு நபராக இருந்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரபலங்கள் குறித்து ட்விட்டரில் அவதூறாக பேசி வந்தார். ஆனால், சமீபத்தில் இவர் விஜய், சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி மிகவும் கொச்சையாக பேசி வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் பல்வேறு பிரபலங்களும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Bigg boss 3 tamil: பிக் பாஸ் வீட்டில் ...

அதில் சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல விஷயங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரை ஒருவர் புகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு பேசுவதும், அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொண்டுவரும் கண்ணாடி வீட்டிலிருந்து கல் இருந்து கொள்வது போலவும், மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்வது போலவாகும். நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது. நம் சக கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும். நடிகர் சங்கம் மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை.

- Advertisement -

அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்து வருகிறார். மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் நடிகர் விஜய். பல்வேறு அடித்தளங்கள் அமைத்து விஜயும் சூர்யாவும் உயரத்துக்கு வந்துள்ளனர்.அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.

மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி, எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல், இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும். பசியைப் போக்கும். அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement