மீரா மிதுனின் உருவ பொம்மையை எரித்த அப்துல் கலாம் பேரவை உறுப்பினர்கள். வீடியோ இதோ.

0
539
- Advertisement -

கடந்த சில நாட்களாக மீரா மிதுன் தான் சமூக வளைத்ததில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். மீரா மிதுன் குறித்து நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நாடங்கங்கள் அனைத்தையும் நான் பார்த்தோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் மீது போலீசில் பலர் புகார்களை கூட கொடுத்திருந்தனர்.

-விளம்பரம்-

சூர்யாவின் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் தான் மீரா மிதுன் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே அம்மணி கடந்த சில தினங்களாக விஜய் பற்றி தான் தொடர்ந்து ட்வீட்களை செய்து வருகிறார். இந்த நிலையில் பாண்டிச்சேரி அப்துல்கலாம் பேரவை உறுப்பினர்கள் மீரா மிதுனின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தி உள்ளார்கள். சமூக வளைதளத்தில் விஜய் சூர்யா ஜோதிகா என்று பலரை அவதூறாக பேசி மீராமிதுன் தொடர்ந்து பதிவிட்டு வருவதால் மீராமிதுன் மீது புதுச்சேரியில் புகாரையும் அளித்துள்ளனர்.

- Advertisement -

மீராமிதுன் உருவபொம்மையை எரித்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால் வழக்கம்போல இதையும் ஒரு பப்ளிசிட்டி ஆக எடுத்துக் கொண்டுள்ள மீராமிதுன் அந்த வீடியோவை பகிர்ந்து தயவுசெய்து விஜய் மற்றும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அப்துல் கலாமின் பெயரை பயன்படுத்தாதீர்கள் தயவு செய்து உங்கள் அமைப்பின் பெயரையாவது மாற்றி விடுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் மீரா மிதுன்

தற்போது மீராமிதுன் கோயம்புத்தூரில் எடுத்ததாகவும் கொச்சினில் எடுத்தது என்று பதிவிடும் அனைத்து புகைப்படமும் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் என்று மைக்கில் மீரா மிதுனின் நாடகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார். இதன் மூலமே மீராமிதுன் தான் எங்கே இருக்கிறோம் என்பதை யாருக்கும் தெரியாமல் பாது காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

-விளம்பரம்-

Advertisement