அவருக்கு தெரியும் என்ன பண்ணாருன்னு.. மீண்டும் சேரன் குறித்து சர்ச்சையை கிளப்பிய மீரா..

0
4984
cheran-meera
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகி இருந்தது, இதனால் ரசிங்கர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மீது மிகப்பெரிய அவப் பெயர் உண்டானது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஒரு எபிசோடில் சேரன் தன்னை தவறான இடத்தில் தொட்டு தூக்கி தள்ளி விட்டார் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த வாரமே குறும்படம் போட்டு சேரன் எந்த தவறும் செய்யவில்லை மீரா தான் இல்லாததையும் பொல்லாததையும் கூறி வருகிறார் என்று நிரூபணமானது. இருப்பினும் சேரன் பெயரை கெடுக்க மீரா பல்வேறு திட்டங்களை தேடி வந்தார். அந்த ஆடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் போட்டியாளர்களைப் பற்றி பல்வேறு சர்ச்சையான விஷயங்களை பேசி வீடியோவை வெளியிட்டு வருகிறார் மீரா.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் சேரன் குறித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் மீராமிதுன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பேசிய மீரா, அந்த வீடியோவில் பேசிய மீராமிதுன், நான் உள்ளே சென்றபோது எனக்கு கை கொடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் சேரன். டி ராஜேந்தர் படத்தில் வருவதுபோல நான் பெண்களை தொடவே மாட்டேன் என்று சீன் போட்டார் சேரன். பின்னர் மற்ற பெண்களிடம் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு ஜாலியாகத்தான் விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் ,என்னிடம் மட்டும்தான் நான் அணியும் ஆடை குறித்து எல்லாம் அறிவுரை சொன்னார். மேலும், எனது தந்தையின் வளர்ப்பு சரியில்லை என்றும் என்னிடம் கூறியிருந்தார். இவர் யார் என்னுடைய தந்தையை பற்றி பேச. எனக்கு மட்டும் ஆடையில் அறிவுரை வழங்கிய சேரன் என்னை விட மோசமான ஆடைகளை அணிந்த மற்ற பெண்கள் குறித்து எதுவுமே சொல்லவில்லை.

- Advertisement -

ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் சென்றபோது எனக்கு மக்களின் ஆதரவு இருந்தது. ஆனால், சேரன் விஷயத்தில் நான் வெளியே வந்து உடன் ஜோடி நம்பர் ஒன்னில் என்னுடன் ஆடிய ஆசிப் தற்போது அவரை நல்லவர் போல தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அனைவருமே ஜோடி நம்பர் ஒன் ப்ரோமோவை மட்டும் தான் பார்த்து உள்ளீர்கள். ஆனால், ஹாட்ஸ்டாரில் சென்று முழு எபிசோட்யும் பாருங்கள் அப்போதுதான் அவர் என்ன செய்தார் என்பது தெரியும் நான் ஆசிப்புடன் இருந்த போது என்னை தாங்கி பிடிப்பது போல ஒரு நடனம் அமைக்கப்பட்டது. ஆனால், அவர் என்னை தாங்கி பிடிக்காமல் என்னை அப்படியே விட்டுவிட்டார். அதிர்ஷ்டவசமாக எனக்கு எதுவும் அடிபடவில்லை. ஆனால், சேரன் விஷயத்தில் என் மீது பலரும் குறை சொன்னவுடன் சொன்னவுடன் தற்போது தப்பானவன் என்று நிரூபிக்கப்பட்ட ஆசிப் நான் ஒரு நிரபராதி என்று இப்போது காண்பித்துக் கொண்டு உள்ளார்.

சேரன் விஷயத்தில் யாருமே எனக்கு ஆதரவாக இல்லை அங்கே இருக்கும் ஆண்கள் கூட மிகவும் கோழைத்தனமாக எனக்கு என்ன நடந்தது என்று கூட கேட்காமல் சேரனுக்கு தான் ஆதரவாக இருந்து வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் சேரன் பெரிய இயக்குனர் என்ற எண்ணம் இருந்தது. இதனால் அவரிடம் எதிர்த்து பேச யாருக்கும் தைரியம் இல்லை. ஆனால், எனக்கு அதுபோன்ற எந்த அவசியமும் இல்லை எனக்கு இது போன்ற விஷயங்களில் பிரபலத்தை தேடிக்கொள்ள வேண்டும் வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரே ஒரு போட்டோஷூட் நடத்தினால் அடுத்த நாளே எனக்கு பிரபலம் தேடி வந்துவிடும். சேரனுக்கு உண்மையில் தைரியம் இருந்தால் என்னிடம் மன்னிப்பு கேட்டு இருப்பார். ஆனால், அவர் பொதுவாக தான் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

சேரன், உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்திருந்தால் ஆமாம், நான் தப்பு செய்துவிட்டேன் மன்னித்து விடு என்று என்னிடம் கூறி இருக்கவேண்டும். உங்களுக்கு தைரியம் கிடையாது என்று கூறிய மீரா, அமெரிக்காவில் metoo ஆரம்பிக்கப்பட்ட போது அதில் யாராவது புகார் அளித்தால் அந்த புகாரில் சம்பந்தப்பட்ட நபரை விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை பதவியிலிருந்து நீக்கி விடுவார்கள். ஆனால், தமிழகத்தில் தான் ஒரு பெண் ஒரு ஆண் மீது குற்றம் சாட்டினால் அதை அப்படியே அந்த பெண் மீது திருப்பி விடுகிறார்கள். எனக்கு ஆதரவாக சென்னை மட்டும்தான் இருந்தார். ஆனால், அவர் சொன்னதை கூட யாரும் நம்பவில்லை என்று பேசியுள்ளார் மீரா மிதுன். ஏற்கனவே பல்வேறு நபர்கள் குறித்து சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வந்த மீராமிதுன் தற்போது சேரன் குறித்தும் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement