பிக் பாஸ்ஸிற்கு பின் முகென் ராவ் வெளியிட்ட முதல் வீடியோ.! உருக்கமான பேச்சு.!

0
3370
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது கடந்த இரண்டு சீசன்களில் இல்லாத அளவு இந்த சீசன் தான் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று இருந்ததாக தொலைக்காட்சி நிறுவனர் கூட நேற்று மேடையில் அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு விதமான மேடு பள்ளங்களை சந்தித்து நான்கு போட்டியாளர்கள் மட்டும் இறுதிப்போட்டியில் நுழைந்தது இருந்தார்கள்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பலவேறு போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொண்டார்கள் அதில் மிகவும் முக்கியமானவர்கள் தர்ஷன் லாஸ்லியா முகென் ஆகிய மூவர்கள் தான். இதில் தர்ஷன் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு நுழைவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் முகென் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததால் தர்ஷன் ரசிகர்கள் கூட முகெனுக்கு ஆதரவாக இருந்து வந்தார்கள் அதற்கு முக்கிய காரணமே தர்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் தர்ஷனிடம் சகோதரர் போல பழகி வந்தார். மேலும், பிக்பாஸில் இருந்து தான் வெளியேறினாலும் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்றுமுகெனிடம் கூறினார் தர்ஷன்.

- Advertisement -

தர்ஷன் கூறியது போலவே பிக்பாஸ் பட்டத்தை வென்று தர்ஷினின் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் முகென், இறுதிப்போட்டியில் சாண்டி லாஸ்லியா ஷெரின் முகென் ஆகிய 4 பேர் தகுதி ஆகியிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டு இருந்தார் அவருக்கு தொடர்ந்து லாஸ்லியா வெளியேறி இதுதான் ரசிகனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக அமைந்திருந்தது., இறுதியில் சாண்டி மற்றும் இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் வெற்றியாளராக மகுடம் சூடினார்.

Image

தர்ஷன் ஆசை பட்டது போல முகென் பிக் பாஸ் வெற்றியாளராக வந்து தர்ஷன் ஆசையை நேற்று நிறைவு செய்து விட்டார். மேலும் நேற்றய நிகழ்ச்சியில் முகேனின் நண்பர்களும் முகெனை தோளில் தூக்கிக்கொண்டு கொண்டாடினார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய முகென் கண்டிப்பாக தமிழக ரசிகர்களுக்கு நன்றியுடன் இருப்பேன் என்றும் சினிமா துறையில் ஏதாவது சாதிப்பேன் என்றும் இந்த வெற்றிக்கு கைமாறு செய்யும் வகையில் கலைத்துறையில் ஏதாவது நான் செய்வேன் என்றும் மிகவும் உருக்கமாக பேசியிருந்தேன். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவில், சந்தோசமாகவும் ஆசிர்வதிக்கபட்டவனாகவும் உணர்கிறேன். நான் ஆரம்பிக்கும் போது மிகவும் சாதாரண ஒரு ஆளாக தான் நான் துவங்கினேன். ஆனால், என்னை உந்தி தள்ளியது நீங்கள் தான். உங்கள் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி. நிறைய ஆல்பங்கள் செய்வேன். கண்டிப்பாக உங்கள் அனைவரையும் தனியாக சந்திக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், அதற்கான நேரமும் இடமும் அமையவில்லை. விரைவில் உங்கள் அனைவரயும் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

Advertisement