கையில் பிக் பாஸ் கோப்பையுடன் முகென் ராவ்.! வெளியான எக்ஸ்க்ளுசிவ் புகைப்படம் இதோ.!

0
6741
mugen
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகளமாக நிறைவு பெற்றது. மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்குபவர் யார்?என்று அனைவருக்கும் தெரிந்ததே ,அது நம்ம உலகநாயகன் தாங்க. கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயங்கள் எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினார்கள்.

-விளம்பரம்-
mugen

பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 105 நாட்கள்,சுற்றி கேமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டைகள், பிரச்சினைகள், காதல், நட்பு என அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது.இந்நிலையில் தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற தருணமிது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கோலாகலமாக நிறைவு பெற்றது .வழக்கம் போல் ஐந்து போட்டியாளர்களை வைத்து தான் ஓட்டிங் முறை நடக்கும்.

- Advertisement -

ஆனால், தற்போது 4 போட்டியாளர்களை வைத்து நடக்கிறது. கவின் தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில் சாண்டி,முகின், லாஸ்லியா,ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இறுதி கட்டத்திற்கு போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். இந்நிலையில் இந்த வாரம் முழுக்க நடந்த ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் முதல் இடத்தை முகின் பிடித்துள்ளார் என்றுகமல் அறிவித்திருந்தார். இன்னிக்கு 6 மணிக்கு தான் பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் யார்? என்று அறிவிச்சாங்க மேலும் வெற்றியாளர் யார் என்பது குறித்து தவிர மற்ற பகுதிகள் எல்லாம் நேற்றே எடுக்கப்பட்டது. அதை தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது. இந்த நிலையில் முகென் தனது நண்பருடன் இருக்கும் கையில் பிக் பாஸ் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சற்று முன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3ன் ரேட்டிங் முடிவை அறிவித்தார்கள்.இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் அனைவரும் எதிர்பார்த்து இருந்த மாதிரி முகென் தான்.மேலும், இரண்டாம் இடத்தை சாண்டி பிடித்திருக்கிறார்.அதனைத்தொடர்ந்து மூன்றாம் இடத்தை லாஸ்லியா பிடித்துள்ளார் . லாஸ்லியா இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் லாஸ்லியாவிற்கு மூன்றாம் இடம் கிடைத்து பலருக்கும் வியப்பாக இருந்தது . மேலும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் இது. உண்மையிலேயே பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக முகென் ஆகுவதற்கு 100% தகுதியும் ,வாய்ப்பும் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், சற்று முன் கிடைத்த ரேட்டிங் முடிவை இணையங்களில் வந்தவுடன் பிக்பாஸ் ரசிகர்களும் மக்களும் உற்சாகத்துடன் மகிழ்ந்து வருகின்றனர். ஏதோ கிரிகெட் மேட்ச்சில் இந்தியா பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றது போல் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.மேலும் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர்க்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிக்பாஸ் குழு அறிவித்திருந்தது.அந்த அதிர்ஷ்டசாலி முகென் தான் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், மலேசியா ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

Advertisement