‘ஏன்னா நீ என் Friend இல்லல’ – நிரூப்பிடம் வல்லவன் ரீமா சென் போல நடந்து வரும் அனிதா, வீடியோவை கண்டு முகம் சுழிக்கும் ரசிகர்கள்.

0
617
anitha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க,அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதாவின் பெயர் தான் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருகிறது. 4ஆம் சீசனில் பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கினார் அனிதா. அதே பாணியை இந்த சீசனிலும் கடைபிடித்து வந்தாலும் அது அவருக்கே வினையாக முடிந்துவிட்டது. தான் விளையாடுவதை விட்டுவிட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று தான் அனிதா அதிகம் யோசித்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

பெயரை கெடுத்து வரும் அனிதா :

அதே போல 4ஆம் சீசனில் இவர் சுமங்கலி பஞ்சாயத்து குறித்து பேசி காமலிடமே கைதட்டலை வாங்கினார். ஆனால், இந்த சீசனில் இருக்கும் அனிதாவே வேறு.இந்த சீசனில் அனிதா பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸின் குழந்தை என் வயிற்றில் வளருகிறது என்று பேசி பலரை முகம் சுளிக்க வைத்தார். அனிதாவின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் பலர் இவரா? இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தனர்.

கொச்சையாக பேசிய அனிதா :

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட நிரூப் மற்றும் அனிதா பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நிரூப், அந்த ரெண்டு பாட்டில எடுத்து உள்ளே வை என்று அனிதாவிடம் நிரூப் சொல்ல அதற்கு அனிதா சூ* வைப்பாங்க. நான் ஏன் வைக்கணும், அது யார் பாட்டிலோ அவங்கல வைக்க சொல்லு போடா என்று படு கொச்சையாக பேசி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

-விளம்பரம்-

நிரூப்பிடம் அனிதா நடந்துகொள்ளும் விதம் :

இது ஒரு புறம் இருக்க சமீப காலமாக நிரூப் மீது அனிதா ஒரு தனிப்பட்ட பாசத்தை காண்பித்து வருகிறார். மேலும், அவரை யார் எது சொன்னாலும் அவருக்கு முன்பாக அவருக்காக வாதாடுகிறார் அனிதா. சமீப நாட்களாகவே இவர்கள் இருவரின் உறவையும் சமூக வலைதளத்தில் விமர்சித்து தான் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அனிதா, நிரூப்பிடம் பேசும் விதத்தையும் நடக்கும் வித்ததையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் அனிதா நிரூப்பிடம் செல்லமாக கோவித்த கொண்ட அனிதா, இனி நான் சோகமாக இருந்தா உன்கூட பேச மாட்டேன், லிவிங் ரூமில் உன் பக்கத்துல உக்கார மாட்டேன் ஏனா நான் உன் Friend இல்லல என்று வல்லவன் படத்தில் ரீமா சென்னை பார்த்து சிம்பு பேசும் வசனத்தை போல பேசி இருக்கிறார். அதே போல நிரூப், அனிதாவிடம் ‘பிரபாவை ரொம்ப லவ் பண்ற தானா’ என்று கேட்க அதற்கு சிரித்தபடி அனிதா ஏன் கேக்குற என்று கேட்டு இருக்கிறார்.

அதே போல தன்னிடம் இருந்து நிரூப் கொஞ்சம் விலகி செல்வதாக நினைத்து தாமரையிடம் அழுது புலம்பி இருக்கிறார் அனிதா. அதே போல தற்போது நடைபெற்று வரும் டாஸ்கில் நிரூப்,, அனிதாவின் கூட்டை திறந்து பார்க்க, அதற்க்கு அனிதா எதுக்கு ஓப்பன் பண்ணி பாக்குற அப்புறம் நானும் ஓப்பன் பண்ணி பாப்பேன், எது எது எங்கு இருக்குன்னு என்று பேசி இருக்கிறார். இப்படி நிரூப் விஷயத்தில் அனிதா நடந்துகொண்டுவரும் விதத்தால் நெட்டிசன்கள் பலரும் கொஞ்சம் முகம் சுழித்து வருகின்றனர். மேலும், இது அக்கா தம்பி இப்படி தான் பேசுவார்களா என்றும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement