யாஷிகா, அபிராமியை தொடர்ந்து ஐசுவுடனும் காதலா? முதன் முறையாக மனம் திறந்த நிரூப்.

0
154
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. அந்த வகையில் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பத்தில் மணி – ரவீனா தான் காதல் கண்டன்ட்க்கு கிசு கிசுக்கப்பட்டு இருந்தனர். இவர்களை தொடர்ந்து காதல் கிசு கிசுவில் சிக்கி இருந்தது நிக்சன் – ஐசு தான். ஆரம்பத்தில் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள். முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார். ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன் ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருந்தார். பின் நிக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி ஒரு முறை நிக்சன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர்.

- Advertisement -

ஐசு-நிரூப்:

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் கழுவி ஊற்றி இருந்தார்கள். ஐசு வெளியில் ஒரு boy friendஐ வைத்துக்கொண்டு இப்படி செய்தது வருகிறது பலரை முகம் சுளிக்க வைத்தது. இப்படி ஐசு தொடர்ந்து தனக்கு வெளியில் காதலன் இருக்கிறான் என்று கூறிக்கொண்டு வந்தது அது நிரூப் தான் என்று சில கிசு கிசு எழுந்தது. மேலும், நிரூப்பின் பிறந்தநாளில் ஐசு தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட வீடியோ ஒன்றும் வைரலாகி இருந்தது.

நிரூப் காதல்:

மேலும், நிரூப், பிக் பாஸ் போட்டியின் மூலம் தான் பிரபலமானார். அவர் பிக் பாஸில் இருந்த போதே யாஷிகாவுடன் தனக்கு காதல் இருந்ததாகவும் பின்னர் அவரை பிரிந்துவிட்டதாகவும் சொல்லி இருந்தார். அதே போல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவருக்கும் அபிராமிக்கு இருந்த காதல் தெரியவந்தது. இப்படி பல பிக் பாஸ் போட்டியாளருடன் காதலில் இருந்துள்ள நிரூப் தான் தற்போது ஐசுவின் காதலராக இருந்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

நிரூப் பேட்டி:

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நிரூப் சொன்னது, சோசியல் மீடியாவில் சொல்வது போல் ஐசும் நானும் கதைக்கவில்லை. இது அப்பட்டமான பொய். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இருக்கிறோம். மற்றபடி எங்களுக்குள் எந்த ஒரு காதலும் கிடையாது. ஏன் இப்படி தேவையில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

காதல் குறித்து சொன்னது:

அவர் வேலையை அவர் செய்து கொண்டிருக்கிறார். நான் என்னுடைய வேலை செய்து கொண்டிருக்கிறேன். தேவையில்லாமல் பொய்யான தகவலை பரப்பாதீர்கள். ஆயிரம் பேர் 10,000 விஷயத்தை செல்வார்க.ள் அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? என்று கூறியிருக்கிறார்.

Advertisement