ஒரு Drinks பார்ட்டி வைத்தார் கமல், அங்கு நானும் போய் இருந்தேன், அப்போது – கமல் குறித்தும் பாலாஜி குறித்தும் பேசிய நித்யா.

0
710
nithya
- Advertisement -

கடந்த சில வருடமாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலை விரித்து ஆடி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது.

-விளம்பரம்-

பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது.அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

பாலாஜி அளித்த புகார் :

பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்த போது தனது மகள் குறித்து கண் கலங்கி பேசி இருந்தார். அப்போது தன் மகளிடம் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நித்யா.இந்த நிலையில் தனது மகளை, மனைவி பிடியிலிருந்து மீட்டுத் தரும்படியும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நடிகர் தாடி பாலாஜி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

வீடியோவில் 11 : 32 நிமிடத்தில் பார்க்கவும்

கமல் ஒரு மோசமான கேரக்டர் :

இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ள நித்யா, என் தரப்பு நியாயம் என்ன என்பதை கோர்ட் ஆர்த்துக்கொள்ளட்டும், மீடியா முன் பேசினால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்ன ? என்று கூறியுள்ளார். மேலும், பிக் பாஸில் கமல் செய்த அட்வைஸ் குறித்து கேட்ட போது ‘அவர பத்தி பேசுனா, அவர பத்தி நிறய வெளியிட்டுவிடுவேன். அவர மாதிரி மோசமான கேரக்டரை நான் என் லைப்ல பாத்தது இல்ல, வேண்டாம் என்ன பேச வச்சிராதீங்க’ என்று பேசி இருக்கிறார் நித்யா.

-விளம்பரம்-

கமல் வைத்த மது விருந்து :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நித்யா, பிக் பாஸ் முடிந்ததும் கமல் ஒரு மது விருந்து வைத்ததாகவும் அப்போது பாலாஜி தன்னிடம் சொல்லாமலேயே வந்ததாகவும் அப்போது கமல் முன் நல்லவர் போல பாலாஜி நடித்தார். அப்போது முதல் கமலிடம் இந்த பிரச்சனை குறித்து நான் பேச முற்பட்டேன். மக்கள் நீதி மய்யத்திற்காக நான் மிகவும் உழைத்தேன். அப்போதும் அவர் என்னிடம் என்ன பிரச்சனை என்பதை கேட்கவில்லை. தன் கட்சயில் இருக்கும் பெண்ணின் பிரச்சனையையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை.

கமல் குறித்து நித்யா :

அவரா மக்கள் பிரச்சனையை தீர்க்கப்போகிறார். மக்கள் நீதி மையம் பேருக்கு மட்டும் தான் மக்களுக்கு எந்த நீதியும் இல்லை என்று கூறியுள்ளார் நித்யா. அதே போல பாலாஜி குறித்து பேசிய நித்யா, அவர் நன்றாக நாடகம் போடுகிறார். அவர் மீடியாவிற்காக தான் இத்தனையும் செய்கிறார். அவர் கூட அவர் வேலைக்காக என் மகளை கூட்டி சென்று இருக்கிறார். ஆனால், நான் கூட்டி போனதை மட்டும் குற்றம் சொல்கிறார். அவர் கண்டிப்பாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார் நித்யா.

Advertisement