இப்படி தான் ஐசுவையும் பண்ண சொல்லி பார்த்தார் – நிக்சன் செயலை கண்டிக்கும் ரசிகர்கள். வைரலாகும் வீடியோ இதோ.

0
224
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் லவ் டிராக் இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் லவ் டிராக்கை கொடுத்தது நிக்சன் – ஐசு தான். ஆனால், ஐசுவிடம் செய்த பல எல்லை மீறிய செயல்கள் பலரை முகம் சுழிக்க வைத்தது. இதனால் ஐசுவின் பெயரும் டேமேஜ் ஆனது. ஐசுவின் வெளியேற்றத்தை எண்ணி கொஞ்ச நாள் புலம்பிகொண்டு இருந்த நிக்சன் தற்போது மீண்டும் தனது லீலைகளை ஆரம்பித்துவிட்டதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

கடந்த வாரம் நிக்சன் கேப்டனாக இருந்த போது பூர்ணிமா ரூல்ஸ் மீறியதால் கிட்சன் கேஸ் நிறுத்தப்பட்டது. இதனால் தனியாக பூர்ணிமாவிடம் நிக்சன் பேசிக்கொண்டு இருக்கும் போது அதற்கு தண்டனையாக 10 எண்ணும் வரை கையை தூக்கி நிற்க சொன்னார். இந்த வீடியோவை தற்போது பகிரும் நெட்டிசன்கள் இதே போல தான் ஐசுவை கூட தலையை பின்ன சொல்லி நிக்சன் ரசித்தார் என்று நிக்சனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸு, நிக்சனுடன் நெருக்கமாக பழகியது, கண்ணாடியில் முத்தம் கொடுத்தது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் அவருடைய பெற்றோர்கள் பிக் பாஸ் இடத்திற்கே வந்து, என் மகளை வெளியே அனுப்பிவிடுங்கள். குடும்பமானமே போகிறது என்றெல்லாம் புலம்பி அழுந்திருந்தார்கள் என்றும் செய்திகள் வெளியானது. பின் பிக் பாஸ் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். ஐசுவின் வெளியேற்றத்திற்கு இதுவும் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் பிரதீப்பிடம் ஐசுவின் தந்தை உரையாடிய வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பிரதீப் வெளியிட்டு இருந்தார். அந்த உரையாடலில் ‘இந்த வாரம் ஐசு எலிமினேட் ஆனால் மிகவும் சந்தோசப்படுவேன். நீங்கள் உள்ளே செல்ல வாய்ப்பு இருந்தால் தயவு செய்து நிக்சனிடம் இருந்து அவளை காப்பற்றுங்கள். ஒரு சகோதரனாக என் குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ என்று கதறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த சீசன் ஆரம்பித்த முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிக்சன் வெளியேற வேண்டும் என்று பெரும்பாலான பிக் பாஸ் ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர்.

அதற்கு ஏதுவாக இந்த வாரம் நிக்சன், நாமினேஷனில் வந்தார். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பிக் பாஸில் இருக்கும் அனைவரும் நிக்சன் பெயரை தான் சொல்லி இருந்தனர். இதனால் ஸ்மால் பாஸ் டீமில் இருந்து நிக்சன் ஒருவர் மட்டும் தான் நாமினேட் ஆகி இருந்தார். இதன் மூலம் விக்ரம், பூர்ணிமா ஆகிய இருவரும் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருந்தனர்.

இந்த வாரம் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 5 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். மேலும், இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் நிக்ஜாம் புயல் காரணமாக புயலின் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார நாமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று விஜய் டிவி அறிவித்து இருக்கிறது.

இந்த சீசனில் No Eviction வாரமாக இருப்பது இது இரண்டாவது முறை. இந்த சீஸனின் இரண்டாம் வாரத்தில் பாவா செல்லதுரை வெளியேறியதால் அந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வாரத்தில் மாயா தான் வெளியேறுவார் என்று எதிர்பாக்கப்பட்டது. அந்த வகையில் இந்த வாரம் நிக்சன் நிச்சயம் வெளியேறுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் No Eviction என்று அறிவிக்கப்பட்டு நிக்ஸன் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

Advertisement