கல்லி பால் ஊத்தி கொல்லணும், அன்று கெக்கபெக்கனு சிரித்துவிட்டு இன்றும் ஒன்றும் தெரியாதது போல இருக்கும் ரவீனா. இதோ அந்த வீடியோ.

0
476
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, அன்னயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்த Freeze Task நேற்று துவங்கி இருந்தது. இதில் நேற்றய நிகழ்ச்சியில் விக்ரம் குடும்பத்தினர், அர்ச்சனா குடும்பத்தினர், விஜய் வர்மாவின் தாயார், பூர்ணிமாவின் தாயார் என்று பலர் உள்ளே வந்தனர். உள்ளே வந்த அனைவரும் போட்டியாளர்களிடம் மிகவும் ஓப்பனாகவே பேசி இருந்தனர். அர்ச்சனாவின் தந்தை உள்ளே சென்றதும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் செய்த தவறு குறித்து சுட்டி காட்டினார்.

- Advertisement -

குறிப்பாக அர்ச்சனாவை சிறு வயதிலேயே கள்ளிப்பால் ஊத்தி கொன்று இருக்கனும் என்று நிக்சன் சொன்னதை அவரிடமே கேட்டார். அர்ச்சனாவின் தந்தை இப்படி நேருக்கு நேராக கேட்டதும் என்ன சொல்வது என்று புரியாமல் இருந்தார் நிக்சன். அதற்கெல்லாம் மேலாக அன்று நிக்சன் இதை சொன்ன போது கூட அமர்ந்து சிரித்துக்கொண்டு இருந்த ரவீனா, இன்றும் ஒன்றுமே தெரியாதது போல அமர்ந்துகொண்டு இருந்தார்.

மேலும், விக்ரமிடம் அர்ச்சனா அப்பா, கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று விக்ரமனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். காரணம், விசித்ரா- அர்ச்சனா இடையே சில மிஸ்அண்டர் ஸ்டாண்டிங் நடந்துகொள்ளும் போது பாத்ரூமில் அர்ச்சனா புலம்பி கொண்டிருந்தார்.விக்ரம், அக்ஷயா இருவரும் சேர்ந்து அவளுக்கு தெரியாமல் பின்னாடி கிண்டல் கேலி செய்திருந்தீர்கள்.

-விளம்பரம்-

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய வில்லை என்றாலும் அவர்களுடைய கஷ்டத்தை கேலி செய்யாதீர்கள் கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் விக்ரம் சாரி, நாங்கள் விளையாட்டாக செய்தது என்றெல்லாம் பேசி இருந்தார். அதற்குப் பிறகு மாயா, அர்ச்சனாவின் பெற்றோர்கள் காலில் விழுந்து நான் தவறு செய்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டிருக்கிறார். பின் பூர்ணிமா, விஷ்ணுவும் நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்று பேசுகிறார்.

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விசித்ரா, விக்ரம், ரவீனா என்று மூன்று பேர் மட்டும் தான் நாமினேஷனில் இடம்பெற்று இருக்கின்றனர். இதில் விசித்ரா நிச்சம் வெளியில் செல்ல வாய்ப்பு இல்லை. எனவே, ரவீனா மற்றும் விக்ரம் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் தான் வெளியில் செல்ல போகிறார்கள். இதில் விக்ரம் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement