விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். அதிலும் இந்த முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா.
ஆனால், களவாணி படத்திற்கு முன்பேய் இவர் தமிழ் படத்தில் நடித்துள்ளார். ஆம், 2009 ஆம் ஆண்டு ஷர்வந் மற்றும் சனுஷா நடிப்பில் வெளியான ‘நாளை நமதே’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு களவாணி படத்தில் தான் அறிமுகம் என்ற அங்கீகாரம் கிடைத்தது. நடிகை ஓவியா களவாணி படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து.
மேலும், இவருக்கு என்று சமூக வளைதளத்தில் பல்வேறு ஆர்மிக்களையும் உருவாக்கினார்கள்.பிக்பாஸ் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெற்ற பிரபலத்தை வைத்து இவருக்கு எந்த பட வாய்ப்பும் தேடி வரவில்லை.
இதனால் ஒரு சில படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்த ஓவியா, சமீபத்தில் 90எம்எல் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் ஆபாச காட்சிகளில் நடித்தும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளானார். இருப்பினும் அந்த விமர்சனங்களை எல்லாம் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொண்டார்.