சுச்சித்ராவுடன் தன்னை ஒப்பிடுவது குறித்து மனம் திருந்த ஓவியா – என்ன கூறியுள்ளார் என்று பாருங்க ?

0
11326
oviya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்காண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த முதல் சீசனில் எத்தனையோ பிரபலங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தாலும் ஓவியா அளவிற்கு இன்று வரை யாரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வில்லை சொல்லப்போனால் இவருக்குத் தான் முதன்முதலில் சமூக வலைத்தளத்தில் ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாக இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இன்று வரை இவருக்கு என்று எக்கச்சக்க ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

தமிழில் பிக் பாஸ் சீசன் துவங்கினாலே ஓவியாவுடன் ஒப்பிட்டு ஒருசில போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்ற ஒரு விமர்சனம் எழுவது வழக்கமான ஒரு விஷயம் தான். கடந்த சீசனில் லாஸ்லியா ஓவியாவை காப்பி அடித்ததாக கூட விமர்சனங்கள் எழுந்தன. அந்த வகையில் இந்த சீசனில் சுசித்ரா தான் ஓவியா போல நடந்து கொண்டு வருகிறார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதிலும் சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தபோது ஓவியா போலவே ஹேர் ஸ்டைலை வைத்துக்கொண்டு துள்ளிக்குதித்து வெகுளி போல நடந்து கொண்டது பலருக்கும் ஓவியாவை நினைவூட்டியது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியாவிடம் சுசித்ராவை உங்களுடன் ஒப்பிடுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் பதில் அளித்த ஓவியா ‘இதைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. என்னுடன் ஒப்பிடுவதை அவள் விரும்பினால் சுசித்ரா சொல்ல வேண்டும். என்னை என்னுடன் ஒப்பிடும் நபர்களை அவள் விரும்புகிறாளா என்று எனக்குத் தெரியாது. சில நேரங்களில் நீங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு அவர்களின் சொந்த தனித்துவம் உள்ளது.

மக்கள் அவளை என்னுடன் ஒப்பிட வேண்டும் என்று நான் பெரிய நபர் அல்ல. அவளை என்னுடன் ஒப்பிடுவது ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கவில்லை, அது அவளுக்கு கடினமாக இருக்கும், மேலும் இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அனைவருக்கும் தனித்துவமான எழுத்துக்கள் உள்ளன, யாரும் ஒரே மாதிரியாக இல்லை. ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவது சரியான விஷயம் என்று நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் ஓவியா.

-விளம்பரம்-
Advertisement