கணவர் இறப்பிற்கு பின் ஒருவரை அவள் விரும்பினால், ஆனால் – பவானியின் அக்கா வெளியிட்ட பதிவு.

0
40502
pavani
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

அந்த வகையில் பவானி ரெட்டியும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு நடிகை தான்.பவானிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. திருமணமாந 8 மாதத்தில் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.

- Advertisement -

கடந்து வந்த பாதை டாஸ்கில் கூட தன் கணவர் குறித்து உருக்கமாக பேசிய பவானி, தன் கணவர் இறந்த பின் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவருடன் திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும் ஆனால், அது நடக்கவில்லை என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் பவானிக்கு இரண்டாம் திருமணம் நடந்துவிட்டதாக விமர்சனம் செய்தனர்.

இப்படி ஒரு நிலையில் பவானியின் மூத்த அக்கா ஒருவர் இதுகுறித்து பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், பவானி அவளது கணவர் இறப்பிற்குப் பின்னர் மறுமணம் செய்து கொள்ளவில்லை அவரின் மறைவிற்கு பின்னர் அவரின் நினைவுகள் அவரை விட்டு நீங்கவில்லை ஆனால் அவள் சமீப காலமாக வேறு ஒருவரை விரும்பினாள் நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர விரும்பினோம்.

-விளம்பரம்-

ஆனால், சில காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமுகமாக பிரிந்தனர். அவள் கடந்த 4 ஆண்டுகளாக தனது கணவரின் மறைவிற்குப் பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக தைரியமாக வாழ கற்றுக்கொண்டால். அவளின் உணர்வுகளையும் தனிநபர் உரிமைகளையும் மதித்து அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement