‘என் கணவர் உயிருடன் வந்தால்’ – தன் முதல் கணவர் குறித்து பாவனி சொன்ன அதிர்ச்சி பதில் – அப்போ அமீருடன் காதல் என்னாச்சு?

0
445
pavni
- Advertisement -

முதல் கணவர் குறித்து பாவனி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை’ போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : முதல் நாளே பொன்னியின் செல்வன் வசூல் எவ்வளவு தெரியுமா? லைகா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.

அமீர்-பாவனி காதல்:

தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். இருந்தும் அவரை இறுதி சுற்று வரை ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக வெளிப்படையாக கூறி இருந்தார்.

-விளம்பரம்-

பிபி ஜோடிகள் 2:

ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிபி ஜோடிகள் 2ல் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார்கள்.

காதலை உறுதி செய்த பாவனி:

இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி இருந்தார்கள். அதேபோல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் டைட்டில் வின்னர் அமீர்- பாவனி தான். அதுமட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி அமீரை காதலிப்பதை உறுதி செய்திருந்தார். பின் இருவரும் சேர்ந்து படங்கள், ஆல்பம் சாங், நிகழ்ச்சிகள் என்று பிசியாக பங்கேற்று வருகின்றனர்.

பாவனி அளித்த பேட்டி:

இந்த நிலையில் பாவனி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் உங்கள் வாழ்க்கையில் திரும்பி நடக்க வேண்டும் என்று நினைக்கும் தருணங்கள் என்ன என்று கேள்வி கேட்டார்கள்? அதற்கு பாவனி கூறியிருந்தது, நான் என் கணவர் திரும்பி வரவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், நான் அமீரை காதலிப்பது உண்மைதான். இதனால் நான் இரண்டு நிலைப்பாட்டில் இருப்பதாக யாரும் எண்ணிவிடாதீர்கள். என் கணவர் திரும்பி வந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு தெரியாமலேயே அவர் என்னை விட்டுப் போய்விட்டார். அந்த வாழ்க்கை திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று கண் கலங்கியவாறு கூறியிருந்தார்.

Advertisement