ராஜு சொன்ன ஒரு வார்த்தை, கட்டி பிடித்து அழுத பாவனி, தம்ஸ் அப் காட்டிய அண்ணாச்சி – பல நாள் கழித்து வெளியான அழகான ப்ரோமோ.

0
664
pavni
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் – அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான் . அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

-விளம்பரம்-

பவானி மற்றும் அபிநய் இருவரும் தங்களுக்குள் எதுவும் இல்ல என்று சொன்னாலும் இவர்களை முடிச்சி போட்டு இன்னும் பேசிக்கொண்டு தான் வருகின்றனர். நேற்று நடைபெற்ற டாக்கில் கூட சிபி, அநபிய்க்கும் பாவனிகும் இருப்பது நட்பும் இல்லை காதலும் இல்லை. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் உறவு பற்றி யாருக்கும் புரியவில்லை என்று கேள்வி கேட்டிருந்தார் இதற்கு ஒரு சிலர் ஆம் என்றும் ஒரு சிலர் இல்லை என்றும் கூறி இருந்தார்கள்.

- Advertisement -

இந்த டாஸ்க் முடிந்த பின்னர் இதுகுறித்து சிபியிடம் விளக்கம் கேட்டு இருந்தார் பாவணி. பிக்பாஸ் வீட்டில் பவானி யாரிடம் பேசினாலும் அதை முடிச்சுப்போட்டு போட்டியாளர்கள் பேசுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. ஆனாலும், பவானி அமீரிடம் பேசுவது அபிநயிக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் உறுதியாக சொல்ல முடியும். அதனை பலமுறை நாம் கண்டு இருக்கலாம்.

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போது சஞ்சீவ், பாவனியிடம் இந்த ஐடியாவை கொடுத்தது ராஜு தான் என்று சொல்ல,எமோஷனல் ஆன பாவனி அவரை கட்டி அனைத்து கண் கலங்கினார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இந்த சீசனில் வந்த மிக சிறந்த ப்ரோமோ இது தான் என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement