எனது கன்னித்தன்மையை விற்று மகளை நடிகையாக்கினார் – ரஜினி பட நடிகையின் அப்பா மீது நடிகை பகீர் புகார்.

0
548
Sonakshi
- Advertisement -

நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை வைத்து தான் சோனாக்ஷி சின்ஹாவை நடிகை ஆக்கினார் என்று பிக்பாஸ் நடிகை பூஜா மிஸ்ரா அளித்து இருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனாக்ஷி சின்கா. நடிகர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி. இவர் முதலில் ஆடை வடிவமைப்பாளராக தான் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தபாங் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், தமிழில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதே பெயரில் தெலுங்கிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் சோனாக்ஷி தமிழில் முதலும் கடைசியுமாக நடித்த படம் இது தான். ஆனால், இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சோனாக்ஷி தந்தை குறித்து நடிகை பூஜா மிஸ்ரா அளித்து இருந்த புகார் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

பூஜா மிஸ்ரா பற்றிய தகவல்:

பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூஜா மிஸ்ரா. இவர் ஆரம்பத்தில் மாடலாக தான் இருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். இந்நிலையில் பூஜா மிஸ்ரா, நடிகர் சத்ருகன் சின்கா குறித்து கூறியிருப்பது, நடிகர் சத்ருகன் சின்கா எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். என்னை மயக்கமடையச் செய்து என்னை வைத்து பாலியல் தொழில் செய்து இருந்தார். இதனால் எனது கன்னிதன்மையை விற்பனை செய்து பேஷன் டிசைனராக இருந்த தன் மகளை நடிகையாகினார்.

பூஜா மிஸ்ரா அளித்த புகார்:

எனக்கு எதிராக சத்ருகன் சின்கா பில்லி சூனியம் செய்து இருந்தார். ஒரு காலத்தில் என் தந்தையும் சத்ருகன் சின்ஹாவும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அப்போது சத்ருகன் மனைவி என் தந்தையை மூளைச்சலவை செய்து பாலிவுட் விபச்சாரம் செய்ய மட்டுமே உதவும் என்று கூறி என்னை சினிமா துறையில் நுழைய விடாமல் தடுத்து விட்டார். பின் என் தந்தை 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். அதன்பிறகு அவர் புனேவிற்குச் சென்றுவிட்டார். ஆனால், என்னை சத்ருகன் சின்ஹாவும் அவர் மனைவியும் மும்பையில் தொடர்ந்து தங்கும்படி நிர்ப்பந்தம் செய்தார்கள்.

-விளம்பரம்-

சத்ருகன்- அவரது மனைவி செய்த காரியம்:

அதோடு சத்ருகன் சின்ஹாவும், அவர் மனைவியும் சேர்ந்து என்னிடமிருந்து 35 படங்களைத் திருடி விட்டனர். மொத்தத்தில் சத்ருகன் சின்கா குடும்பம் ஒரு பேராசை பிடித்தது. அதுமட்டும் இல்லாமால் சத்ருகன் சின்ஹாவும், அவர் மனைவியும் எனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து எனது ஸ்பான்சர்களின் பட்டியலைத் திருடிவிட்டனர். மேலும், ஒரு முறை சத்ருகன் சின்ஹாவின் பிறந்த நாளுக்கு நான் சென்ற போது எனக்கு எதையோ கொடுத்து சாப்பிடச் செய்து பில்லிசூனியம் வைத்தனர். மேலும், 2007-14 ஆம் ஆண்டு வரை லோகண்ட்வாலாவில் உள்ள எனது வீட்டில் தங்கியிருந்தேன். எங்களது வீட்டிற்கு மேல் சத்ருகன் சின்ஹா தங்கியிருந்தார்.

சினிமாத்துறையில் சாதிக்க முடியாத காரணம்:

நான் சிங்கப்பூரில் ஷாப்பிங் முடித்து வந்தால் போதும் அவர்கள் அந்தப் பொருள்களைத் திருடிவிடுவர்கள். அதுமட்டும்இல்லாமல் சத்ருகன் சின்ஹாவால் தான் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் பாலிவுட்டில் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் சத்ருகன் சின்ஹாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. இதனால் நான் என் வாழ்க்கையில் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன் என்று கூறியிருந்தார். இப்படி பூஜா அளித்திருந்த புகார் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சத்ருகன் மற்றும் சோனாக்ஷி சின்கா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement