நான் விக்ரம கரப்பான்பூச்சின்னு Bullyனா நீங்க என்ன அப்படி பண்ணதும் Bully தான் – பிக் பாஸ் மீதே பழி போட்ட பூர்ணிமா

0
589
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள். இதனால் பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருக்கிறது. மணி உடைய பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அதன் பின் தினேஷ் அம்மா, அப்பா, இதனை அடுத்து விஷ்ணு அம்மா, அர்ச்சனா அம்மா, அப்பா வருகிறார்கள். பின் ரவீனாவின் உறவினர்கள் விதியை மீறி வெளியில் நடந்து கொண்டிருப்பதை கோட்வோர்டில் சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -

வெளியேறிய சரவண விக்ரம்:

இதனால் விதியை மீறி இவர்கள் இருவரும் சொல்லியதால் பிக் பாஸ் அவர்களை உடனடியாகவே வெளியில் அனுப்பி விட்டார்கள். இப்படி உறவினர்களும் தங்களால் முடிந்தவரை ஹிண்ட் எல்லாம் கொடுத்து இருந்தார்கள். மேலும், கடந்த வாரம் விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் சரவணன் விக்ரம் வெளியேறி இருக்கிறார். இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை. அதோடு அடிக்கடி இவர், தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்றும் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் ரசிகர்களுக்கு மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது.

பூர்ணிமா பேசிய வீடியோ:

பின் இந்த வார நாமினேஷன் முடிந்துள்ளது. அதில் விஷ்ணு, மாயா, ரவீனா, மணி, நிக்சன், தினேஷ் ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் செய்தது தவறு என்று அவரை எதிர்த்து பூர்ணிமா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. அதில், நான் விக்ரமை கரப்பான் பூச்சி என்று சொன்னதற்கு குரல் கொடுங்கள் என்று கேட்டார். நானும் செய்த தவறு யோசித்தேன். அதற்கு பிறகு தான் எனக்கும் அந்த மாதிரி அநியாயம் நடந்ததை உணர்ந்தேன். டாஸ்கின் போது எனக்கு தவளை பேண்ட் கொடுத்திருந்தார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் விமர்சித்த பூர்ணிமா:

என்னுடைய விருப்பமே இல்லாமல் அந்த பேண்டை இரண்டு நாள் என்னை போட வைத்திருந்தீர்கள். நான் விக்ரமுக்கு அந்த பட்டப் பெயர் வைத்தது தவறு என்றால் எனக்கு விருப்பமே இல்லாமல் என்னை போர்ஸ் பண்ணி அந்த பேண்டை போட வைத்தது உங்களுடைய தவறு தான். இந்த நிகழ்ச்சியில் பூமராங் பயன்படுத்தலாமா? என்று யோசித்தேன். ஆனால், நீங்களே பூமராங் என்று கொடுத்திருந்தீர்கள். இது உங்கள் தவறு தான். நீங்கள் கொடுத்தது தான். என்னை புள்ளி என்று சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் பண்ணதும் புள்ளி வேலை தான்.

பாராட்டும் போட்டியாளர்கள்:

அதேபோல் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டேன். நீங்கள் எனக்கு தடையாக பண்ணீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் பண்ண சில செயல்கள் என் மனதிற்குள் தடையை தருகிறது. பிக் பாஸே எனக்கு தடையாக இருந்தும் நான் கப்பு ஜெயித்து இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார். இப்படி பூர்ணிமா பேசியதை கேட்டு போட்டியாளர்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். தற்போது சோசியல் மீடியாவில் பூர்ணிமா பேசியதற்கு பலருமே பாராட்டி வருகிறார்கள்.

Advertisement