யார இம்ப்ரஸ் பண்ண இதெலலாம் பண்றீங்க – பூர்ணிமாவை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து லெப்ட் ரைட் வாங்கிய பிக் பாஸ்.

0
191
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 5 வாரத்தை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மக்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை,விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகிய 6 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருக்கும் பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருந்து வந்தார். ஆரம்பத்தில் இவரது கேம் மிகவும் நன்றாக இருந்து வந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இவர் மாயா உடன் இணைந்து செய்யும் சில விஷயங்கள் பலரை முகம் சுளிக்க வைத்து வருகிறது.

- Advertisement -

மேலும் மூச்சுக்கு 300 முறை நான் கேப்டன் நான் கேப்டன் என்று சொல்லிக் கொண்டு வருகிறார் பூர்ணிமா. அதேபோல இவர் கேப்டனாக இருந்து வருவதால் மாயாவின் பேச்சை தவிர வேறு யாரிடமும் கலந்துரையாடாமல் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் இவர் செய்த விஷயத்தால் பிக் பாஸே கடுப்பாகி இருக்கிறார். வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா வந்த முதல் நாளே பிக் பாஸ் வீட்டார் தன்னை சரியாக வரவேற்கவில்லை என்று குறை கூறியிருந்தார்.

இதனால் மாயாவிற்கும் அர்ச்சனாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட உடனே கண்ணீர் விட்டு அழுதார் மாயா இதனை தொடர்ந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்த முதல் வாரத்திலேயே அவர்கள் அனைவரையும் கேப்டன் பூர்ணிமா ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஸ்மால் வீட்டிற்கு சென்றதிலிருந்து அர்ச்சனா, தம்மால் இங்கே இருக்க முடியவில்லை என்று தொடர்ந்து புலம்பிக் கொண்டே வந்தார்.

-விளம்பரம்-

ஒரு கட்டத்தில் தனக்கு ஒரே இடத்தில் இருந்தால் பைத்தியம் பிடிப்பது போல ஆகிவிடும் என்று கதறி அழுதார் அர்ச்சனா. இதனால் அர்ச்சனா மீது கரிசன பட்ட கேப்டன் பூர்ணிமா, அவரை வெளியே அழைத்து வந்ததோடு கார்டன் ஏரியாவில் அமரச் செய்து அவரை ஆஸ்வாசப்படுத்தினார். இப்படி ஒரு நிலையில் பூரணிமாவை அழைத்த பிக் பாஸ் யாரை இம்ப்ரஸ் செய்ய இதையெல்லாம் செய்கிறீர்கள் இந்த வீட்டில் ரூல்ஸ் என்பது மிகவும் முக்கியம்.

எதுவாக இருந்தாலும் நீங்கள் இன்று பண்ணதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை ஒரு கேப்டன் உடைய வேலை இந்த வீட்டின் ஒழுங்கு முறையை சரியாக வைப்பது தான். என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றால் இந்த வீட்டிற்கு கேப்டன் என்பவரை தேவை கிடையாது. சில விதிகள் இந்த வீட்டிற்கு மிகவும் முக்கியம். அப்போது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகிவிடாதா.

எப்படியும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு முடிவு செய்கிறீர்கள் அர்ச்சனாவை பிக் பாஸ் ரூமில் வையுங்கள் ஸ்மால் வாஸ் ரூமில் வையுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் நீங்கள் செல்லலாம் என்று பூர்ணிமாவை லெப்ட் ரைட் வாங்கினார் பிக் பாஸ்ஸின் இந்த பேச்சைக் கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்த பூர்ணிமா மன்னிப்பு கேட்டு, இதற்கு என்ன தண்டனை கொடுக்கிறீர்களோ கொடுங்கள் என்று சொன்னார். பின்னர் வெளியே வந்த பூர்ணிமாவிடம் பிக் பாஸ் என்ன சொன்னார் என்று கேட்டதற்கு என்னிடம் தனிப்பட்ட முறையில் பிக் பாஸ் பேசினார் என்று கூறி சென்று விட்டார்

Advertisement