விட்டிருந்தால் எலிமினேஷன், உஷாராக பணப்பெட்டியை தூக்கிகொண்டு வெளியேறிய போட்டியாளர் – எத்தனை லட்சம் தெரியுமா?

0
192
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் பணப்பெட்டி டாஸ்க் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 94 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார்.

- Advertisement -

பணப்பெட்டி டாஸ்க் :

இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருந்தது.இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த டாஸ்க்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு இருக்கிறது. மேலும், இன்னும் சில தினங்களிலேயே இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது. இதில் யார் டைட்டில் வின்னர்? ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள்.

பணத்துடன் சென்ற பூர்ணிமா :

இன்னொரு பக்கம் பணப்பெட்டியை எடுத்து செல்பவர்களுக்கு அந்த பணம் மட்டுமா? இல்லை அதனுடன் சேர்த்து சம்பளமும் கிடைக்குமா? என்று பலருக்குமே சந்தேகம் இருக்கும். பணப் பெட்டி டாஸ்க்கை பொறுத்த வரை ஒரு குறிப்பிட்ட தொகையில் இருந்து பணத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகும். ஒரு வேளை யாரும் அந்த பெட்டியை எடுக்கவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையுடன் மீண்டும் அந்த பெட்டி எடுத்து செல்லப்படும்.

-விளம்பரம்-

ஆனால் இந்த முறை பணப் பெட்டியில் இருக்கும் தொகை கூடவும் செய்யலாம், குறையவும் செய்யலாம் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய ட்விட்ஸை கொடுத்துள்ளார் பிக் பாஸ். கடந்த 6 சீசன்களில் இப்படி ஒரு அறிவிப்பு அறிவிக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியின் இறுதிவரை பணப் பெட்டியில் 3.5 லட்சம் இருந்தது.

பூர்ணிமா எடுத்து சென்ற தொகை :

இன்றைய நிகழ்ச்சியில் 12 லட்சமாக கூடியது. ஆனால், அதையும் யாரும் எடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் 16 லட்சம் பணத்துடன் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த வாரம் விஷ்ணுவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கின்றனர். இதில் மணி, பூர்ணிமா, விஜய் வர்மா ஆகிய மூன்று பேரில் யாராவது ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில் பூர்ணிமாவின் இந்த முடிவு சாமர்த்தியம் தான்.

Advertisement