தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பிக் பாஸ் கவிஞனின் நெருங்கிய நண்பரும் ஆவார். நடிகை அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த அருவி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரதீப் நடித்திருந்தார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் என்ற படத்தில் ஹீரோவாகவும் பிரதீப் நடித்திருந்தார்.
இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படத்தின் மூலம் தான். இந்த படத்தில் பிரதீப் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு இவர் ஆல்பம், நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று இருக்கிறார். மேலும், பிரதீப்க்கு நடிகர் ஆகுவதை விட இயக்குனர் மீது தான் அதிக ஆர்வம். அதற்காக இவர் பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார்.
பிரதீப் ஆண்டனி குறித்த தகவல்:
பின் இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி இருந்தார். இடையில் ப்ரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் குற்றம் சாட்டியதால் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள்.
#PradeepAntony breaks ice on the fake feminists allegation & @vijaytelevision decision to bring him as wildcard. Self created squad, tribe nu 100 allakaigala vachikitu oora yamathiralamnu suthikitu errukuringa poopokum nu 😂 @maya_skrishnan @IamPoornimaRavi 👭 Pure souls😂😂😂 pic.twitter.com/PPemzMXBAz
— Manivannan N (@nrockersman) May 19, 2024
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரதீப்:
இதனால் ரசிகர்கள் கமலை வறுத்து எடுத்திருந்தார்கள். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தான் பிரதீப்க்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக உருவாகி இருந்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவுக்கு கூட பிரதீப் வரவில்லை. மீண்டும் பிரதீப் பிக் பாஸ் வீட்டுக்குள் வராதது, நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.
பிரதீப் ஆண்டனி பேட்டி:
அந்த படம் குறித்த அப்டேட் எல்லாம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதீப் ஆண்டனி, விஜய் டிவி வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு என்னை கூப்பிட்டார்கள். அது உண்மை தான். ஆனால், எனக்கு தான் போக விருப்பமில்லை. வெளியே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு உள்ளே சென்று விளையாடுவதில் சுவாரசியம் கிடையாது. அதனால் நான் போகவில்லை. அதோடு என்னை குறித்து வந்த விமர்சனத்திற்கு விஜய் டிவி என் மீது தவறு இல்லை என்று புரிந்து தான் அழைத்தார்கள்.
விஜய் டிவி குறித்து சொன்னது:
அதோடு 24/7 மட்டும் இல்லை என்றால் என்னை பற்றி தவறாக தான் சென்று கொண்டிருக்கும். அதை பார்த்தவர்கள் தான் என் மீது தவறு இல்லை என்று நிரூபிக்க முடிந்தது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்று சொல்வார்கள். அதே போல் நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் பிரதீப் ஆண்டனியின் பிறந்தநாளுக்கு விஜய் டிவி வாழ்த்துக்கள் சொல்லி பொக்கே அனுப்பி வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.