ராஜ மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட பிரதீப் – முக்கிய இடத்தில் கிடைத்த கெளரவம்

0
158
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இரண்டாம் இடத்தை மணியும் முன்றாம் இடத்தை மாயாவும் பிடித்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கவின் நடிப்பில் வெளியாகி இருந்த டாடா என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதற்கு முன்பும் இவர் ஆல்பம், நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று இருந்தார்.

- Advertisement -

இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது டாடா படம் தான். அதற்கு பின் இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருந்தது. அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி:

அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். மேலும், இந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி வந்தார். பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் பிரதீப் மீது குற்றம் சாட்டியதால் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கருத்து:

பிரதிப்பை விட நிக்சன், மாயா, பூர்ணிமா ஆகிய பலருமே மோசமாக வீட்டிற்குள் நடந்து கொண்டிருக்கும்போது பிரதீப்பை எப்படி வெளியேற்றலாம் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். அதோடு இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் கமலை வறுத்து எடுத்திருந்தார்கள். மீண்டும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தும் பிரதீப் வரவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

பிரதீப்பிற்கு கிடைத்த கெளரவம் :

அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலுமே பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக் பாஸுக்கு பின் எந்த ஒரு பேட்டியையும் பிரதீப் கொடுக்காத போதிலும் இவரை பற்றி சமூக வலைதளத்தில் அடிக்கடி ஏதாவது ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது. இப்படி ஒரு நிலையில் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார் பிரதீப். அதில் பிரதீப்புக்கு ராஜ மரியாதை கொடுத்து மாஸான வரவேற்பும் அளித்துள்ளார்.

Advertisement