Balls விஷயத்தை Twist செய்துள்ள ரவீனா, பேசி வைத்து குற்றம் சாட்டிய மாயா குரூப் – பிரதீப்பிற்கு நடந்துள்ள அநீதி. வெளியான உண்மை.

0
380
- Advertisement -

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒருவர் வெளியேறுவது வழக்கம் தான். அந்த வகையில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா வெளியேற அவரை தொடர்ந்து 5 Wild Card போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் Double Eviction நடைபெற்றது.

- Advertisement -

பிரதீப்பின் வெளியேற்றம் :

இதில் வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card பெற்று வெளியேற்றப்பட்டார். பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். டைட்டில் வின்னர் வாய்ப்பு இருந்த பிரதீப்பின் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

பிரதீப்பிற்கு எதிராக உரிமை குரல் எழுப்பியவர்கள் :

அதிலும் குறிப்பாக அவரை எதோ பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நபராக முத்திரை குத்தி அனுப்பப்பட்டது தான் பலருக்கும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. மேலும், பிரதீப்பிற்கு எதிராக விசித்ரா, அர்ச்சனா மற்றும் அன்ன பாரதியை தவிர அணைத்து போட்டியாளர்களும் பிரதீப்பால் தங்களுக்கு ஆபத்து என்பது போலவே கூறி இருந்தனர். பிரதீப் வெளியேறியதில் இருந்தே அர்ச்சனா மற்றும் விசித்ரா, மாயா & Coவிற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர்.

-விளம்பரம்-

விசித்ரா கேட்ட கேள்வி :

அந்த வகையில் விசித்ரா, நீங்கள் அனைவரும் பேசி வைத்து தான் அவனை வெளியேற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ஜோவிகா, நங்கள் யாரும் பேசி வைத்து செய்யவில்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மாயா, பூர்ணிமா,ஐசு மூவரும் பிரதீப் மீது என்ன குற்றச்சாட்டை வைக்கலாம் என்று திட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அக்ஷயாவையும் இந்த சதியில் சேர்க்க முயற்சி செய்து இருக்கின்றனர்.

பூர்ணிமா விஷயம் :

அதே போல் பிரதீப் மீது இருக்கும் இன்னோரு குற்றச்சாட்டு, பால் டாஸ்க்கின் போது அவர் பூர்ணிமாவை குறிப்பிட்டு பேசியதாக ரவீனா சொல்லி இருந்தார். ஆனால், இதுகுறித்து பூரணிமாவிடம் பிரதீப் இதுகுறித்து பேசி இருக்கிறார். அப்போது விஷ்ணு – மணி இருவரும் பாலை உதைக்கும் போது ‘பாத்துடா படாதா இடத்தில் (Balls) பட்டட போகுது என்று அவர்களை தான் சொன்னேனே தவிர உன்னை சொல்லவில்லை, நான் அப்படி பேசபவன் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், பூர்ணிமாவும் இந்த விஷயத்தை பற்றி அப்போதே தெளிவு பெற்றுவிட்டார். ஆனால், ரவீனா தான் பிரதீப், பூர்ணிமாவை பேசியதாக திசை திருப்பினார். மேலும், பிரதீப் மீது இருக்கும் இன்னொரு குற்றச்சாட்டு அவர் கதவை சாத்தாமல் பாத் ரூம் போனார் என்பது. ஆனால், இதுகுறித்து பேசி இருக்கும் விசித்ரா, பாத் ரூமில் லாக் இல்லை என்றால் எப்படி போவான் என்று கூறியுள்ளார். இப்படி எல்லா விஷயத்திலும் பிரதீப் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி அவரை வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.

Advertisement