பொம்பள கேஸ் போட்டு அனுப்சாங்க – பூர்ணிமா வெளியேறியதும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளியிட்ட பிரதீப் 

0
660
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 96 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார். இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருந்தது. இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த டாஸ்க்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு இருக் கும். இன்னொரு பக்கம் இன்னும் சில தினங்களிலேயே இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது. இதில் யார் டைட்டில் வின்னர்? ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் குறித்த சர்ச்சை:

இது ஒரு பக்கம் இருக்க, மற்ற சீசன்களை விட இந்த ஏழாவது சீசன் தான் அதிக சர்ச்சைகளில் சிக்கிருந்தது என்றே சொல்லலாம். இந்த சீசனில் தான் கமலஹாசனை அதிகமாக விமர்சித்து இருந்தார்கள். காரணம், சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் விவகாரம் தான். இந்த சீசனில் பிரபலமான பிரபலமான மற்றும் பலமான போட்டியாளராக இருந்தவர் பிரதீப். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகமாக தான் இருந்தது.

பிரதீப் குறித்த சர்ச்சை:

கண்டிப்பாக, இவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதற்கு முழுக்க முழுக்க காரணம் மாயா- பூர்ணிமா கேங்க் தான். பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் கூறியிருந்ததார்கள். கமலும், பிரதீப் தரப்பு குறித்து கேட்காமலேயே வெளியேற்றினார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்து கமலை வறுத்தெடுத்து இருந்தார்கள். இந்த நிலையில் நேற்று எபிசோட்டில் பூர்ணிமா 16 லட்சம் ரூபாய் மதிப்புடைய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் விமர்சனம்:

இதற்கு நெட்டிசங்கள் விமர்சித்து வந்தார்கள். இதை பார்த்து கடுப்பான பிரதீப், பூர்ணிமா அம்மாகிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாறடிக்குற கும்பல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாய கிளராதீங்க. பொளச்சு போங்க. உங்க பொளப்ப கெடுக்க மாட்டேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த பூர்ணிமா ரசிகர்கள் கொந்தளித்து போய் பிரதீப் குடும்பத்தினை பங்கமாக கலாய்த்து கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் கோபம் அடைந்த பிரதீப், பர்ஸ்ட் வெளிய வர போட்டியாளர்கள் கிட்ட பிக்பாஸ் வீட்டு பாத்ரூம்ல தாப்பாள் இருக்கானு கேட்டுட்டு என்னை வந்து கலாய்ங்க.

பிரதீப் பதிலடி:

என் குடும்பத்த இழுங்க. என் மனநிலை பத்தி பேசுங்க. சும்மா ஒன்னும் தெரியாம யூகத்தை தூக்கிக்கிட்டு வராதீங்க. என் மடில கனமில்லை என்று பதில் கொடுத்திருந்தார். இருந்தும் விடாமல் பூர்ணிமா ரசிகர்கள் பிரதிப்பை அட்டாக் செய்து கொண்டே இருந்தார்கள். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரதீப், என்ன அடிச்சு சாவடிச்சு டைட்டில எடுத்துக்கனு நான் தான் சொன்னேன். அவங்க பெருந்தன்மையா பொம்பள case போட்டு அனுப்சிட்டாங்க. அப்டி தான் நான் பார்க்குறேன். உண்மையில் நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. இந்த சீசன் முடிஞ்சதும் நான் போய் சம்பளம் வாங்கிட்டு வர்றேன். அநியாயத்துக்கு டாக்சிக்கா இருக்கு என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Advertisement