பிரதீப் செய்தது தவறு தான் – ஆனால், அவரை பெண்களுக்கு பாதுகாப்பற்றவர் என்று வெளியேற்றியது சரியா?

0
448
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லை மீறும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் சீசன் ஒன்றில் பரணி துவங்கி இந்த சீசனில் பாவா செல்லதுரை வரை நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக ரெக்கார்ட் வாங்கி வெளியேறிய முதல் போட்டியாளர் மஹத்தான். அவரைத் தொடர்ந்து தற்போது ரெக்கார்ட் வாங்கி வெளியேறி இருக்கிறார் பிரதீப்.

-விளம்பரம்-

இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. ஆனால் உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கு பிரதீப் உடன் ஏகப்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. மேலும், பிரதீப் நாமினேஷன் வந்த சமயத்தில் எல்லாம் அவர் காப்பாற்றப்படும் போது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கிடைத்த கைத்தட்டல்களை கண்டு போட்டியாளர்கள் பிரதீப்பிற்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறது என்பதை யூகித்து விட்டனர்.

- Advertisement -

எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.

எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள். ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் பிரதீபால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே மாயா மற்றும் அவரது குழுவினரின் வாதமாக இருந்தது. இதனால் கமல் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்டு கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார். இதில் அன்ன பாரதி, விசித்ரா, அர்ச்சனாவை தவிர மற்ற அனைத்து பெண்களும் பிரதிப்பை வெளியில் அனுப்பலாம் என்று ஒரு மனதாக தேர்வு செய்தார்கள் இதனால் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

பிரதீப் பெண்களை குறைவாக பேசியது தான் அவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் என்றால் கடந்த சீசனில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் இதைவிட பெண்களை தர குறைவாக பேசி இருக்கிறார். ஆனால் அவருக்கு பலமுறை தமிழ் எச்சரிக்கை கொடுத்து அவருக்கு மறு வாய்ப்பு கொடுத்தார். ஆனால், பிரதிப்பிற்கு அவரது நியாயத்தை சொல்ல அவகாசம் கொடுக்கவில்லை என்பதுதான் இங்கே பலரின் கேள்வியாக இருக்கிறது.

அதேபோல இந்த சீசனில் பிரதீப் தான் கண்டன்ட் கொடுக்கும் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். பொதுவாக கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்களை பிக் பாஸ் குழு அவ்வளவு எளிதாக வெளியில் அனுப்பி விடாது. அவர்களை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ளத்தான் பார்க்கும். அந்த வரிசையில் தான் அசீம் கடந்த சீசன் இறுதிப் போட்டி வரை வந்தார். ஆனால், இந்த சீசனில் கண்டன்ட் கொடுக்கும் நபராக இருக்கும் பிரதீப்பை பிக் பாஸ் குழு தக்க வைக்க விரும்பாததற்கு ஒரு பெரிய காரணம் இல்லாமல் இருக்காது.

நாம் ஒருவேளை லைவில் பார்க்காத பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். எது எப்படியோ பிரதீப் நடந்து கொண்ட விதமும் அவர் மற்றவர்களிடம் பேசிய மிகவும் தவறு தான் என்றாலும் அவரது தரப்பு நியாயத்தை கேட்டு வெளியில் அனுப்பி இருக்கலாம் அதே போல பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும் இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

Advertisement