கோழிப்பண்ணை டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர். ஒருவழியா வந்துட்டாரு.

0
6586
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நோமினேஷனில் சோம் ,கேப்ரில்லா,ஜித்தன் , நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். . எனவே, கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

-விளம்பரம்-

எனவே, அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை டபுள் ஏவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருந்தது. ஆனால், 12 போட்டியாளர்கள் அப்படியே இருந்தார்கள். 12 பேர் இருந்தும் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடவில்லை. அதற்கு முக்கிய காரணமே அர்ச்சனாவின் லவ் பேட் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

கடந்த சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ்ஷை வெளியேற்றி இருந்தார். அதே போல ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் நிஷா வெளியேறினார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ரியோ, ஷிவானி, அர்ச்சனா, அனிதா, ஆஜீத், சோம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளார்கள். எனவே, கண்டிப்பாக இந்த வாரம் அர்ச்சனா வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. தற்போது பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் கூட அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோழிப்பண்ணை டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர் ஒவ்வொருக்கும் தங்க முட்டை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதனை நரிகள் ஆக இருக்கும் போட்டியாளர்களிடமிருந்து தங்களது முட்டைகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த டாஸ்க் நேற்றோடு முடிவடைந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும்ப்ரோமோவில் , இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை மற்ற போட்டியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் பாலாவின் பெயரைத்தான் கூறியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement