சுசித்ரா ஒரு பாம்பு மாத்திரை – நெத்தி பொட்டில் அடித்து சொன்ன போட்டியாளர்.

0
4109
suchi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 5 வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 15 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர். ஆனால் 5 வாரம் நிறைவேறிவிட்டது. இந்த ஐந்து வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த இரண்டு வாரத்திற்கு வாரம் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையிலான பிரச்சனை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதே போல ஆரி, இனிமேல் யார் யார் என்னென்ன செய்கிறீர்கள் என்பதை நெத்தி பொட்டில் அடித்தது போல சொல்வேன் என்றார்.அதற்கு ஏற்றார் போல இந்த வாரம் முழுக்க பல இடங்களில் பல உண்மைகளை தைரியமாக கூறியிருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட மூன்று போட்டியாளர்களில் ஆரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

அதே போல இந்த வாரம் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பல பிரச்சனைகள் வெடித்தது. அதிலும் பல இடங்களில் சுச்சத்ரா செய்த நாரதர் வேலைகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட 3 போட்டியாளர்களாக நிஷா, ஆஜீத், கேப்ரில்லா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் டாஸ்க் மூலம் ஆஜீத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல கடந்த இரண்டு தினங்களாக பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டங்கள் தாங்கி நடைபெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்றைய இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் ஒருவருக்கு ஏதாவது ஒரு விடுகின் பெயரை குறிப்பிட்டு அதனை அவர்களிடம் அளிக்கின்றனர் இதில் கேப்ரில்லா சூழ்ச்சிக்கு பாம்பு மாத்திரை பட்டாசை கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement