பாலாஜி தான் சார் இந்த வாரம் போரிங் – நச்சுனு சொன்ன ஒரே ஒரு நபர். கமுக்கமாக இருக்கும் மற்ற போட்டியாளர்கள்.

0
1492
biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 5 வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 15 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர். ஆனால் 5 வாரம் நிறைவேறிவிட்டது. இந்த ஐந்து வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது.

-விளம்பரம்-

அதே போல இந்த வாரம் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பல பிரச்சனைகள் வெடித்தது. அதிலும் பல இடங்களில் சுச்சத்ரா செய்த நாரதர் வேலைகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட 3 போட்டியாளர்களாக நிஷா, ஆஜீத், கேப்ரில்லா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் டாஸ்க் மூலம் ஆஜீத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

அதே போல கடந்த இரண்டு தினங்களாக பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டங்கள் தாங்கி நடைபெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் போரிங் போட்டியாளர்களை கமல் தேர்வு செய்ய சொன்னார். இதில் ஜித்தன் ரமேஷ் பாலாஜியை தேர்வு செய்து உள்ளார். ஆனால், பாலாஜி அதனை ஒப்புக்கொள்ளாமல் நான் மற்ற டாஸ்க்குகளில் ஜெயித்ததாக வாதாடுகிறார்.

Advertisement