கண்ணீர் விட்டு அழும் சம்யுக்தா மற்றும் மற்ற போட்டியாளர்கள். காரணம் இதான்.

0
736
sam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 5 வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா மற்றும் வேல்முருகன் வெளியேறிய நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சுரேஷ் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 16 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர் ஆனால் 5 வாரம் நிறைவேறிவிட்டது.இந்த நான்கு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது. அந்த வகையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையிலான பிரச்சனை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

அதே போல கடந்த வாரம் ஆரி, இனிமேல் யார் யார் என்னென்ன செய்கிறீர்கள் என்பதை நெத்தி பொட்டில் அடித்தது போல சொல்வேன் என்றார்.அதற்கு ஏற்றார் போல இந்த வாரம் முழுக்க பல இடங்களில் பல உண்மைகளை தைரியமாக கூறியிருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட மூன்று போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஆரி, நிஷா, சோம் சேகர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் டாஸ்க் மூலம் ஆரி அடுத்த வார கேப்டனாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், இந்த வாரம் பல மாற்றங்களை கூட கொண்டுவந்துள்ளார் ஆரி. அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் சனம் – பாலாஜி விவகாரத்தில் பாலாஜி சொன்ன அட்ஜஸ்ட்மென்ட் / காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையால் அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது.மேலும், இந்த விவகாரத்தில் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், அப்படி எதவும் நடைபெறவில்லை.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கி இருந்தது. இதில் ஆரி இந்த வார தலைவர் என்பதால் அவரை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது. இந்த வாரம் நடைபெற்றுள்ள நாமினேஷனில் பாலாஜி, சம்யுக்தா, ஷிவானி, அனிதா, கேப்ரில்லா, சுசித்ரா, அர்ச்சனா, ரம்யா, அஜீத் என்று 9 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது இரவில் போட்டியாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது குடும்பத்தினருக்கு கடிதத்தை எழுதி இருக்கிறார்கள் இதில் ஒரு சிலர் தங்களது குடும்பத்தை நினைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்

-விளம்பரம்-
Advertisement