பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைத்த முன்னாள் போட்டியாளர்கள் – யார் யார் தெரியுமா ?

0
832
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 10 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த சீசனில் ஆரி தான் வெல்வார் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதேபோல பாலாஜி அல்லது ரியோ இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா, நிஷா, சித்தன் ரமேஷ் ஆகியோர் சென்றுபோட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். அதேபோல இந்த வாரம் முழுக்க ஏற்கனவே வெளியேறி போட்டியாளர்கள் உள்ளே செல்ல இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement