பிக் பாஸ் பிரபலம் ராணவிற்கு வைத்து இருக்கும் அடைமொழி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக கடந்த மாதம் தான் முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார்.
பிக் பாஸ் 8:
மேலும், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். இந்த டாஸ்க்கில் ஜாக்குலின் தோல்வி அடைந்திருந்தார். இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நடந்து இருந்தது.
முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார்.
டைட்டில் வின்னர்:
இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் ராணவ். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்றியாகத்தான் ராணவ் உள்ளே நுழைந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனித்து தெரிய வேண்டும் என்று பல்வேறு செயல்களை செய்திருந்தார்.
ராணவ் குறித்த தகவல்:
இது சில போட்டியாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது. ஒரு கட்டத்தில் டாஸ்க்கில் ராணவ் கையில் அடிபட்டதால் வலியால் துடித்து இருந்தார். மற்ற போட்டியாளர்களெல்லாம் இவரை கிண்டல் கேலி செய்திருந்தார்கள். இருந்தாலும் விடாமுயற்சியுடன் தான் இவர் விளையாடி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ராணவ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் நடித்திருக்கும் படம் ஒன்று ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
ராணவ் அடைமொழி:
இப்படி இருக்கும் நிலையில் ராணவிற்கு அடைமொழி வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிக் பாஸ் போட்டியாளரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் அவர்கள் ராணவிற்கு ‘புரட்சி புயல்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இதை அவர் எதற்காக வைத்தார் என்று தெரியவில்லை. இதன் மூலம் இவர் சினிமாவில் ஜொலிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.