குழந்தை விஷயத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ள ரச்சித்தா – பிக் பாஸில் அவர் சொல்லியுள்ள விஷயத்தை பாருங்க.

0
582
rachitha
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 65 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 10 போட்டியாளர்கள் போக தற்போது 11 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல முகங்கள் இருக்கின்றனர் அதில் ரச்சிதாவும் ஒருவர்.

-விளம்பரம்-

ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. ஆனால், இதுகுறித்து பேசிய தினேஷ் ன்னை பொறுத்தவரைக்கும் எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான். மற்றபடி நான், ரக்ஷிதா இருவரும் ஒரு சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.

- Advertisement -

ரச்சித்தாவிற்கு ஆதரவாக இருக்கும் தினேஷ் :

என்னதான் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தாலும் ரச்சித்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார். அதே போல ரச்சித்தா பிக் பாஸிற்கு செல்வதற்கு முன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மெசெஜ் அனுப்பி இருக்கிறார் தினேஷ், ஆனால் அதனை பார்த்தும் ரச்சித்தா எந்த பதிலையும் அனுப்பவில்லை என்று பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் தினேஷ்.

குழந்தை விஷயத்தில் ரச்சிதா எடுத்துள்ள முடிவு :

இருந்தும் தற்போது பிக் பாஸில் விளையாடி வரும் ரச்சித்தாவிற்கு ஆதரவாக தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் தினேஷ். ஆனால், ரச்சித்தா இதுவரை தனது கணவர் குறித்து பிக் பாஸில் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்து வருகிறார் ரச்சித்தா. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரச்சித்தா, விக்ரமனிடம் குழந்தையை தத்தெடுப்பது குறித்து பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

35 வயதில் தத்தெடுத்து :

அதில் ‘”நான் என்னோட 35 வது வயதில் தான் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன் , 35 வயது என்ற அளவுகோல் ஏன் வைத்தேன் என்றால், அப்போது தான் இன்னும் நிறைய கற்று கொண்ட அனுபவம் கிடைக்கும் அதன் மூலம் ஒரு குழந்தையை வளர்க்க கூடிய நம்பிக்கை எனக்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அதற்கு விக்ரமன் ‘ஆண் குழந்தையா பெண் குழந்தையா’ என்று கேட்க அதற்கு ரஷிதா ‘பெண் குழந்தை தான். எனக்கு பெண் குழந்தை ன ரொம்ப பிடிக்கும்.’ என்று கூறியுள்ளார்.

கணவருடன் சேர வாய்ப்பில்லையா :

இதன் மூலம் ரச்சித்தா தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்பது போலவே தெரிகிறது. ஏற்கனவே ஒரு எபிசோடில் பேசிய ரச்சித்தா ‘அம்மா அப்பா எல்லோரும் தன்னுடைய குழந்தைக்கு குழந்தைக்கு என்று அனைத்தையும் கொடுத்து விடுகிறார்கள். திருமணத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்து விட்டு விடுவார்கள். நான் சம்பாதிக்கிறேன் நான் ஏன் என்னுடைய தாய் தந்தைக்கு கொடுக்கக் கூடாது. நீ யார் அதை கேட்பதற்கு என்று கண்டிப்பாக ஒரு எண்ணம் தோன்றும். அதுபோன்ற நிலைமை எல்லாம் யாருக்கும் வரக்கூடாது. நான் அந்த நிலைமையை மிகவும் மோசமாக அனுபவித்து இருக்கிறேன் என்றும் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement