அதை, அவர் தவறாக புரிந்து கொண்டார்’ – ராபர்ட் மாஸ்டர் குறித்து முதல் முறையாக பேசிய ரச்சிதா.

0
553
robert
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரஷிதா முதன் முறையாக ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரையில் அதிகம் ரட்சித்தவை பார்த்துக்கொண்டே இருந்தது ராபர்ட் மாஸ்டர் தான். அதனை ரட்சித்தாவும் ஒருமுறை கூறியிருக்கிறார். இந்த நிலையில் ரட்சிதா சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் ராபர்ட் மாஸ்டர் குறித்து ரட்சிதா பேசியது பற்றி கேட்கப்பட்டது.

-விளம்பரம்-
robert

அப்போது ரட்சிதா கூறியதாவது `நான் கூறியது அப்படி பட்ட ஒரு நபர் இப்போது இல்லையே என்று தான் கூறியிருந்தேன். அந்த வாரத்தை சொன்னதற்கான காரணம் பிக் பாஸ் வீட்டில் இத்தனை கேமராக்கள் இருந்தும் என்னை மட்டுமே ஒரு கண் பார்ப்பதை போன்ற உணர்வைத்தான் கொடுத்து. எனவே அந்த நபரே இப்போது இல்லை என்று தான் பேசிக்கொண்டிருந்தேன் அதுதான் உண்மையான காரணம்.

- Advertisement -

ராபர்ட் ஒரு குழந்தை :

மேலும் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் குழந்தை போன்றவர், அவர் செய்யும் எல்லா விஷியங்களிலும் ஏதாவது ஒரு குழந்தை தனம் கண்டிப்பாக இருக்கும். அவருக்கு எடுத்து சொல்லியதே நான் தான். மேலும் மழையில் நினைந்தது குறித்து கேட்கப்பட்டது `அதற்கு பதிலளித்த ரட்சிதா அந்த நேரம் எனக்கு அம்மா நியாபகம் வந்தது, அதனை மறைக்கத்தான் நாள் மழையில் நினைத்தபடி இருந்தேன். அந்த காரணத்தினால் தான் இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று பிக் பாஸும் பாடல் போட்டார்.

இதனால் தான அப்படி செய்தேன் :

அதோடு அந்த இடத்தில ராபர்ட் மாஸ்டர் மட்டும் என்னை வந்து கூப்பிடவில்லை, எல்லா போட்டியாளர்களும் தான் கூப்பிட்டனர். ஆனால் நான் மழையில் நனைகிறேன் உங்களுக்கு என்ன என்றுதான் இருந்தேன். ஒருவேளை நான் எல்லோரிடமும் சிரித்து பேசுவதினால் அதனை வேறுமாதிரியாக எடுத்துக்கொண்டிருக்கலாம். என்னுடைய சோகத்தை மற்றவர்களுக்கு எதற்கு பரப்ப வேண்டும் என்றுதான் அப்படி செய்தேன் கூறினார்.

-விளம்பரம்-

தவறாக பிரிந்து கொண்டார் :

பின்னர் ராபர்ட் மாஸ்டர் ராஜவம்சம் டாஸ்க் முடிவில் அழுதது குறித்து கேட்ட போது `ராபர்ட் மாஸ்டர் அந்த இடத்தை தவறாக பிரிந்து கொண்டார். நான் என்ன நினைத்தேன் என்றால் “நான் ஏதாவது தவறு செய்து என்னால் அழுகிறாரோ என்று தான் நான் சென்று பார்த்தேன். ஆனால் அதற்கு பிறகுதான் தெரிந்தது அவர் தவறாக புரிந்து கொண்டார் என்று அதனை நானும் எப்படி யாவது பேசி பபுரிய வைக்கலாம் என்றுதான் எண்ணினேன்.

robert

ஆனால் அப்படி அவர் அழுவதற்கான எந்த காரணமும் கிடையாது. அதற்க்கான இடமும் அது இல்லை. அது ஒரு விளையாட்டு அவ்ளவுதான். அதற்கு பிறகு தான் ஜெயிலில் அவர் என்னை தொடர்பு படுத்தி கொண்டார் என்று சொல்லும் போதுதான், இந்த விஷயம் வேறு விளையாட்டு வேறு. உங்களுடைய தனிப்பட்ட எண்ணத்தை இந்த விளையாட்டில் கொண்டு வந்தீர்களா என்றால் உங்களுடைய விளையாட்டுதான் பாதிக்கப்படும் என்று அவருக்கு புரியவைத்தேன் என்று ரட்சிதா கூறினார்.

Advertisement