எனக்கு குழந்தை அமைப்பு இருக்குமான்னு தெரியாது,இனி அவர் மட்டும் தான் வாழ்கை – கடிதத்தை படித்து கதறி அழுத ரச்சிதா.

0
1515
Rachitha
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் குழந்தையை எண்ணி கதறி அழுதுள்ள ரச்சிதாவின் வீடியோ பலரையும் கண் கலங்க வைத்து இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 72 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 11 போட்டியாளர்கள் போக தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல முகங்கள் இருக்கின்றனர் அதில் ரச்சிதாவும் ஒருவர்.

-விளம்பரம்-

ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. ஆனால், இதுகுறித்து பேசிய தினேஷ் ன்னை பொறுத்தவரைக்கும் எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான். மற்றபடி நான், ரக்ஷிதா இருவரும் ஒரு சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.

- Advertisement -

ரச்சித்தாவிற்கு ஆதரவாக இருக்கும் தினேஷ் :

என்னதான் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தாலும் ரச்சித்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார். அதே போல ரச்சித்தா பிக் பாஸிற்கு செல்வதற்கு முன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மெசெஜ் அனுப்பி இருக்கிறார் தினேஷ், ஆனால் அதனை பார்த்தும் ரச்சித்தா எந்த பதிலையும் அனுப்பவில்லை என்று பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் தினேஷ்.

கதறி அழுத ரச்சிதா :

இருந்தும் தற்போது பிக் பாஸில் விளையாடி வரும் ரச்சித்தாவிற்கு ஆதரவாக தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் தினேஷ். ஆனால், ரச்சித்தா இதுவரை தனது கணவர் குறித்து பிக் பாஸில் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்து வருகிறார் ரச்சித்தா. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது அனைவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதி அதை படித்துக்காட்டி கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

குழந்தை குறித்து உருகிய ரச்சிதா :

அந்த வகையில் தன்னுடைய கடிதத்தை படித்த ரச்சிதா ‘நான் கடவுளிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் இதற்கு பின்னர் எனக்கு குழந்தை அமைப்பு இருக்கிறதா என்று கூட எனக்கு தெரியாது. என்னுடைய அம்மா தான் என்னுடைய குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தையை எனக்கு கடைசி வரை கொடுக்க வேண்டும். அந்த குழந்தையை நான் நான் நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதை மட்டும் தான் நான் கேட்டுக்கொள்கிறேன். இதற்குப் பின்னர் இனி எனக்கு நீ உனக்கு நான் என்று வாழ்வதற்கு தயாராக இருக்கிறேன் அம்மா’ என்று கண்ணீர் மல்க அந்த கடிதத்தை படித்திருந்தார்.

தத்தெடுக்க முடிவெடுத்துள்ள ரச்சிதா :

ஏற்கனவே ஒரு இடத்தில் விக்ரமனிடன் குழந்தை குறித்து பேசிய ரச்சிதா ””நான் என்னோட 35 வது வயதில் தான் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன் , 35 வயது என்ற அளவுகோல் ஏன் வைத்தேன் என்றால், அப்போது தான் இன்னும் நிறைய கற்று கொண்ட அனுபவம் கிடைக்கும் அதன் மூலம் ஒரு குழந்தையை வளர்க்க கூடிய நம்பிக்கை எனக்கு கிடைக்கும்” என்று கூறி கூறி இருந்தார். தற்போது ரச்சிதா, தன் அம்மாவுடன் தான் இனி வாழ்க்கை என்று கூறி இருப்பது இனி ரச்சிதா, தினேஷுடன் சேருவாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

Advertisement