ஏமாற்றத்தால் கதறி அழுது ராபர்ட் மாஸ்டர் சொன்ன அந்த வார்த்தை – கழிவறைக்கு சென்று கதறி கதறி அழுத ரச்சிதா

0
432
robert
- Advertisement -

என்னை ஏமாத்திட்டாங்க! என்று ரக்ஷிதா செய்த செயலை நினைத்து ராபர்ட் மாஸ்டர் கதறி அழும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

ராபர்ட் மாஸ்டர் குறித்த தகவல்:

அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான். ராபர்ட் மாஸ்டரை பற்றி வெளியில் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதாவின் விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார்.

ராபர்ட் மாஸ்டர்-ரக்ஷிதா:

காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இவர், எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார். பின் ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருக்கிறார். ரக்ஷிதா எங்கு சென்றாலும் அவர் பின்னே தொடர்கிறார். ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

மியூசியம் டாஸ்க்:

இது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா கையை வலுக்கட்டாயமாக பிடித்திருக்கிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் என்னை ஏமாத்திட்டாங்க என்று ரக்ஷிதா செய்த செயலை நினைத்து ராபர்ட் மாஸ்டர் கதறி அழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வாரம் பிக்பாஸ் வீடு மியூசியம் ஆக மாற வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும், ரக்ஷிதா ராணியாகவும் மாறி இருக்கிறார்கள்.

கதறி அழும் ராபர்ட் மாஸ்டர்:

இந்த நிலையில் ரக்ஷிதாவும், அசிமும் சேர்ந்து சீக்ரெட் டாஸ்க் செய்கிறார்கள். இதை பிக் பாஸ் போட்டு உடைக்கிறார். இதனால் மனமுடைந்த ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா என்னை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்து கதறி அழுகிறார். இதை தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் தன்னை நம்பிக்கை துரோகி என்று சொல்லிவிட்டார் என்று ரச்சிதா கோபித்துக்கொண்டு கழிவறையில் சென்று கதறி கதறி அழுதார்.

Advertisement