பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 8 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் அமுதவாணன், Adk ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக ரச்சிதா வெளியேறி இருந்தது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார். ஆனால், திடீர் என்று இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார்.
#Rachitha First Video After Bigg Boss Elimination pic.twitter.com/XAQjwJsSKK
— chettyrajubhai (@chettyrajubhai) January 9, 2023
இதை தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை தொடரிலும் நடித்தார். ஆனால், இந்த தொடரும் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் கடுப்பான ரச்சிதா, கலர்ஸ் தமிழ் சேனலையும், சீரியல் குழுவையும் கடுமையாக விமரித்து இருந்தார். இப்படி தனக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் கொதித்தெழுந்த ரச்சிதா, பிக் பாஸ் வீட்டில் சாதுவாக தான் விளையாடி வந்தார்.
ஆனால், ரச்சிதா இப்படிப்பட்ட ஆளே கிடையாது அவர் வெளியில் படு போல்டாக இருப்பார் என்று அசீம் அடிக்கடி கூறி வந்தார். மேலும், ஒரு ஏபிசோடில் பார்வையாளர்கள் சிலர் கூட பிக் பாஸ் வீட்டிற்கு நீங்கள் பெய்டு விடுமுறைக்கு வந்து இருக்கிறார்களா என்று கேட்க்கும் அளவு ரச்சிதா விளையாடி வந்தார். இதுகுறித்து கமல் பல முறை கூறியும் ரச்சிதா, பிக் பாஸுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
இதுவே இவரது வெளியேற்றத்துக்கு காரணமாக பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரச்சிதா வீட்டிற்கு கூட செல்லாமல் தான் பிக் பாஸில் இருந்த போது தனக்கு உறுதுணையாக இருந்த தனது நண்பர்களின் Studioவிற்கு சென்று இருக்கிறார். அங்கே அவரை தடபுடலாக வரவேற்று இருகின்றனர். மேலும், பிக் பாஸில் தான் பயன்படுத்திய நிப்பான் பைன்ட்ஸ் pillowவை கையுடன் எடுத்து வந்துள்ளார் ரச்சிதா.