பிக் பாஸுக்கு பின் பிரிவு குறித்து உருக்கமாக பேசிய தினேஷ் – நக்கலடிக்கும் விதமாக ரஷிதா போட்ட பதிவு

0
483
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மனம் திறந்து ரக்ஷிதா குறித்து தினேஷ் பேட்டி அளித்திருத்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிதா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சில மாதங்களாகவே ரக்ஷிதா- தினேஷ் உடைய விவகாரம் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்கள் ரக்ஷிதா- தினேஷ். இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரியவில்லை. பின் ரக்ஷிதா கடந்த பிக் பாஸ் 6 சீசனில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை . இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.

- Advertisement -

தினேஷ்-ரக்ஷிதா சர்ச்சை:

பின் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. அதற்கு பின் இருவரும் தங்கள் வேலையை பார்க்க தொடங்கினார்கள். சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் கலந்து கொண்டிருந்தார். இதில் அவருடைய மனைவிக்காக தான் கலந்து கொண்டிருப்பதாகவும், டைட்டிலை அவருக்காக பரிசளிப்பேன் என்றெல்லாம் தினேஷ் கூறியிருந்தார். இதைப் பார்த்த தினேஷ்- ரக்ஷிதா ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் கூறி இருந்தார்கள்.

தினேஷ் அளித்த பேட்டி :

இதற்கு ரக்ஷிதா, வாய்ப்பில்லை என்பது போல பதிவு போட்டிருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் தினேஷ் அவர்கள் முதல்முறையாக அளித்த பேட்டியில் ரக்ஷிதா குறித்து கூறியிருந்தது, நான் உள்ளே போகும்போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்று தான் நினைத்திருந்தேன். டைட்டிலை பெற்று என்னுடைய வாழ்க்கையை மீண்டும் தொடரலாம் என்று நான் ஆசையோடு உள்ளே போனேன்.

-விளம்பரம்-

ஆனால், வெளியே வந்து பார்த்தால் எந்த இடத்தில் இருந்ததோ அந்த மாதிரி தான் இருக்கிறது.இதற்கும் மேலும் ரசிதா மனம் மாறுவார் என்று சொல்ல முடியவில்லை. ரக்ஷிதா ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளே இருந்து கொண்டிருக்கிறார். அது என்னால் உடைக்க முடியாத வகையில் வலுவாக இருக்கிறது. இதற்கும் மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த பேட்டியை தொடர்ந்து ரஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய்’ என்று தினேஷின் பேச்சை நக்கலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement