எல்லாரும் பிரிஞ்சத பத்தி மட்டும் தான் பேசுறாங்க.ஆனா – தினேஷுடனான பிரிவு குறித்து ரஷிதா போட்ட சூசக பதிவு.

0
415
Rachitha
- Advertisement -

தினேஷ் பிரிவு குறித்து ரக்ஷிதா பதிவிட்டு இருக்கும் போஸ்ட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
rachitha

மேலும், இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இதற்கிடையில் இவர் சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்டார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார். ஆனால், இந்த சீரியலை திடீரென்று முடித்து விட்டார்கள். இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

தினேஷ்- ரக்ஷிதா சண்டை:

ஆனால், அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் வேறு எந்த தொடரிலும் கமிட் ஆகவில்லை. மேலும், ஒரு சில படங்களில் ரக்ஷிதா நடித்து வருகிறார்.அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தினேஷ்-ரக்ஷிதா இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.

Rachitha-and-her-husband

தினேஷ்- ரக்ஷிதா சர்ச்சை:

பின் சில மாதங்களுக்கு இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. தினேஷ் தனக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாவும், தன்னை மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் இரவவோடு இரவாக ரஷிதா புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு தினேஷை அழைத்திருந்தார்கள். பின் இருவரையுமே போலீசார் விசாரித்து முறையாக விவாகரத்து செய்ய சொல்லி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ரசிகர்கள் கோரிக்கை:

பின் விவாகரத்து மனுவை ரக்ஷிதா தாக்கல் செய்து இருக்கிறார். இருந்தும் தினேஷ் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். தற்போது தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதில் அவருடைய மனைவிக்காக தான் கலந்து கொண்டிருப்பதாகவும், டைட்டிலை அவருக்காக பரிசளிப்பேன் என்றெல்லாம் கூறியிருந்தார். இதைப் பார்த்த தினேஷ்- ரக்ஷிதா ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

ரக்ஷிதா பதிவு:

இந்த நிலையில் ரக்ஷிதா சோசியல் மீடியாவில் எமோஷனலாக பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், எல்லோருமே வலி ஏற்படுத்தியவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த அளவிற்கு உறுதியான முடிவில் இருக்கிறேன் என்றால் எவ்வளவு வலியை சந்தித்து இருப்பேன் என்று யாருமே யோசிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரக்ஷிதா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் என்ன ஆச்சு? என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்டுட்டு வருகிறார்கள்.

Advertisement