எங்கள் இருவருக்கும் மத்தியில் இருக்கும் பிரச்சனைக்கு அவர் தான் காரணம், தினேஷ் பகிர் குற்றச்சாட்டு.

0
1915
- Advertisement -

ரக்ஷிதா -தினேஷின் பிரிவு குறித்த காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில தினங்களாகவே ரக்ஷிதா- தினேஷ் உடைய விவகாரம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார். இதனிடையே ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ரக்ஷிதா குடும்பம் குறித்த தகவல்:

இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரிய முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை.

ரக்ஷிதா-தினேஷ் இடையே சர்ச்சை:

அவர்கள் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், சமீபத்தில் தன்னுடைய குடும்ப பிரச்சினை குறித்து தினேஷ் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், ஜி ஜி என்கிற டப்பிங் ஆர்டிஸ்ட் ரக்ஷிதாவுக்கு சீரியலில் குரல் கொடுக்கிறார். அவர் ரக்ஷிதாவிற்கு நெருக்கமான நண்பரும் ஆவார். அவரிடம் எல்லா விஷயங்களையும் ரக்ஷிதா பகிர்ந்து கொள்வார். பொதுவாக கணவன் மனைவி பிரச்சனை என்றால் நண்பர்கள் என்ற பெயரில் மூன்றாவது நபர் தலையிடுவது தான் பிரச்சனை பெரிதாகிறது.

-விளம்பரம்-

ஆர்டிஸ்ட் ஜிஜி அளித்த புகார்:

எங்கள் பிரச்சனையிலும் அப்படி தான் நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதன் பின் டப்பிங் ஆர்டிஸ்ட் ஜிஜி அவர்கள் சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகார் அளித்திருக்கிறார். பின் அந்த நாளிலேயே சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் தினேஷ் மீது ரக்ஷிதா புகார் அளித்திருக்கிறார். அதில் ரக்ஷிதா அவர்கள் தினேஷ் மீது சில காரணங்களை கூறி பிரிய இருப்பதாக கூறியுள்ள அவர் தினேஷை பிரிய இரண்டு முக்கிய காரணங்களை கூறி இருக்கிறார். அதில் முதல் காரணம் தன்னுடைய பெற்றோர்களை தினேஷ் மதிக்கவில்லை என்பது தான்.

இன்னொரு காரணம் பின் பணம் பணம் என்று நச்சரிப்பார் என்று ரக்ஷிதா கூறியிருக்கிறார். இதற்கு தினேஷை போலீசார் விசாரிக்க அழைத்திருக்கிறார்கள். அப்போது அவர், ரக்ஷிதா அம்மா, அப்பாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது கூட அவர்கள் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். இந்த நிமிடம் வரை அவர்களுக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லை வேண்டுமென்றால் இப்போது கூட நீங்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

தினேஷ் விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தினேஷ் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ‘நான் அவரை விரட்டுவதாக என் மீது புகார் கொடுத்திருக்கிறார் உண்மை என்ன என்பதை அவருடன் நான் வாட்ஸ் அப்பில் உரையாடிய சாட்டை நீங்களே பாருங்கள். இதையெல்லாம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரே பார்த்துட்டாங்க. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு ரச்சிதாவுக்கு கிடைத்த சில புதிய நட்பால் அவர் தவறான பாதையில் செல்கிறார். அவர்களின் தூண்டுதலாலேயே ரச்சிதா இப்படி நடந்து கொள்கிறார். அந்த நடிகையின் அண்ணன் தான் ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்த போது கூடவே இருந்தார். குடும்பத்தில் 10,15 முறை பேசிட்டாங்க. பிக் பாஸுக்கு பின் வெளியில் வந்த பின்னராவது சரியாகிடும்னு நினைத்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ரச்சிதாவுக்கு விருப்பம் இருந்தால் விவாகரத்து கொடுத்து விலகிவிடுகிறேன்.

Advertisement