அப்போ அசீம் சொன்னது உண்மை தானா ? ரச்சிதா பங்கேற்ற பழைய ரியாலிட்டி ஷோவில் எப்படி வாய் ஆடி இருக்காங்க பாருங்க.

0
893
rachitha
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 72 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி,ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 9 போட்டியாளர்கள் மட்டும் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-
rachitha

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் ரச்சிதாவும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

- Advertisement -

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார். ஆனால், திடீர்என்று இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். இதுகுறித்து பதிவில் ரக்ஷிதா கூறியது, நான் சீரியலில் இல்லை என்பது உங்களில் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சில சூழ்நிலை காரணத்தினால் தான் என்னால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது.

அதனால் தயவு செய்து இந்த முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றம் தந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், பல நேரங்களில் மதிப்பற்றவளாக நான் உணர்ந்தேன். இந்தத் தொடரில் எனக்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து தான் இந்தத் தொடரில் இனி நடிக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். இதை தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை தொடரிலும் நடித்தார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த தொடரும் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் கடுப்பான ரச்சிதா, கலர்ஸ் தமிழ் சேனலையும், சீரியல் குழுவையும் கடுமையாக விமரித்து இருந்தார். இப்படி தனக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் கொதித்தெழுந்த ரச்சிதா, பிக் பாஸ் வீட்டில் சாதுவாக தான் விளையாடி வருகிறார். ஆனால், ரச்சிதா இப்படிப்பட்ட ஆளே கிடையாது அவர் வெளியில் படு போல்டாக இருப்பார் என்று அசீம் அடிக்கடி கூறி வருகிறார்.

ஆனால், ரச்சிதா நான் வெளியில் கூட இப்படி தான் கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் ரச்சிதா, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘4M’ என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரச்சிதா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனை தற்போது பகிரும் நெட்டிசன்கள் இது தான் ரச்சிதாவின் உண்மை முகம் என்று கூறி வருகின்றனர்.

Advertisement