தங்கள் பிரிவு பற்றி உருக்கமாக பேசிய தினேஷ் – ரஷிதா போட்ட karma பதிவு. சேர வாய்ப்பே இல்ல போலயே.

0
462
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 51 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம். தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ். இதனால் நிகழ்ச்சி ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுத்து இருந்தார் பிக் பாஸ். அதில் தினேஷ், எனக்கும் என்னுடைய மனைவி ரக்‌ஷிதாவிற்கும் இடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருக்கிறது. நாங்கள் தனியாக தான் வசித்து வருகிறோம். இது என்னை மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சோகமாக பேசி இருந்தார். இதனால் அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரஷிதாவை பிரிந்தாலும் தினேஷ் அவரை மறக்கவில்லை. தற்போது அவரது கையில் கன்னடத்தில் ரஷிதா என்று குத்திய டாட்டூவை இன்னும் நீக்காமல் இருந்து வருகிறார். எனவே தினேஷ் – ரக்ஷிதா இருவரும் மீண்டும் இனைய வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த எபிசோடுக்கு பின்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் ரக்ஷிதா.

-விளம்பரம்-

அதில், தியானம் செய்வது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘ மற்றவர்கள் சொல்வதை விட உங்கள் தரப்பு நியாயத்தை கர்மா மிக அருமையாக சொல்லும். அமைதியாக இருப்பது நல்லது, மற்றவற்றை அது பார்த்துக்கொள்ளும்’ என்றும் பதிவிட்டுள்ளார். ரசிதாவின் இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. இதில் இருந்தே ரஷிதா, தினேஷுடன் சேர விரும்பாமல் தான் இருந்து வருகிறார் என்றே தோன்றுகிறது.

இது ஒருபுறம் இருக்க தினேஷ் – ரஷிதா பிரிவு குறித்து பேசியுள்ள அவர்களின் நண்பர் ‘தினேஷ் தப்பே பண்ணாதவன் என்று நான் சொல்ல மாட்டேன். இவனிடமும் தப்பு இருக்கிறது. ஆனால், தப்பு என்று தெரிந்தால் சாரி கேட்ட இவன் ரெடியாக இருக்கிறான். ஆனால், ரக்ஷிதா என்ன மனநிலையில் இருக்காங்க என்று தெரியவில்லை. ஒரு வேளை இவனை விட்டு ரக்ஷிதா பிரிந்தால் இன்னொரு திருமண வாழ்க்கை என்ற எண்ணம் தினேஷுக்கு சுத்தமாக இல்லை.’ என்றும் கூறியுள்ளார்.

Advertisement