பவாவின் எதிர்பாராத வெளியேற்றம், Wild Card போட்டியாளராக தயாரான ராஜா ராணி சீரியல் பிரபலம் – யார் தெரியுமா ?

0
2135
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி ஆகும் பிரபலம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபரை கேப்டன் தான் தேர்ந்து எடுப்பார். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

கடந்த வாரம் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். இரண்டாம் வாரத்திற்கான கேப்டனாக சரவணா விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பின் பவா தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது மொத்தம் 16 பேர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நாமினேஷன் பட்டியல்:

நேற்று இரண்டாம் வாரத்திற்கான நாமினேசன் நடைபெற்று இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா, விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். அதோடு பிக் பாஸ் விளையாட்டில் ஆர்வம் இல்லை என்று வினுஷா தேவி, அக்ஷயா இருவரையும் பிக் பாஸ் தேர்வு செய்திருந்தார். இன்னும் மூன்று நாட்களில் அவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இதற்கு முந்தைய சீசனங்களில் போட்டியாளர்கள் தான் சிறைக்கு செல்லும் நபர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

வைல்ட் கார்டு என்ட்ரி:

இந்த முறை பிக் பாஸ் தேர்ந்தெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்டு என்ட்ரியாக புது நபர் ஒருவர் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் ராஜா ராணி அர்ச்சனா தான். இவர் விஜேவாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்கு பிறகு ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டி இருந்தார். ஆனால், இந்த சீரியலில் இவர் பாதியிலேயே வெளியேற்றிவிட்டார். அதற்கு பின்னர் அர்ச்சனா எந்த சீரியலும் கமிட்டாகவில்லை. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்வார் என்று ஆரம்பத்திலேயே கூறப்பட்டது. தற்போது அர்ச்சனாவுக்கு புரொஃபைல் ஷூட் எல்லாம் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுப்பார் என்று நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement