சனிக்கிழமையே எலிமினேஷனை அறிவித்த கமல் – டபுள் ஏவிக்ஷனில் வெளியேறிய முதல் நபர் இவர் தான்.

0
345
kamal
- Advertisement -

இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சனிக்கிழமையே ஒரு போட்டியாளர் வெளியேறி இருக்கிறார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 62 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று கடந்த வாரமே அறிவித்து இருந்தார் கமல். இந்த நிலையில் கடந்த வாரம் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகண்டன், சிவின், தனலட்சுமி ஆகியோருக்கு இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டு இருந்தது. இதில் மணிகண்டன் வெற்றி பெற்று இந்த வார தலைவராகி விட்டார் இதனால் அவர் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார்.

அதேபோல கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் வெற்றி பெற்று தனலட்சுமி நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் சென்று விட்டார் அதனால் அவரும் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பெரும்பாலானோர் ஆயிஷாவின் பெயரை தான் கூறியிருந்தார்கள். அவரை தொடர்ந்து ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் கண்டிப்பாக இந்த லிஸ்டில் இருந்து ராம் வெளியேறுவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. . ஏனெனில் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே ராம் பெரிதாக மக்களை கவரவில்லை. எனவே, அவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், மீதமுள்ள ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர்களில் யார் வெளியேறுவார் என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில் டபுள் எவிக்ஷனில் வெளியேறி இருக்கும் நபர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறி இருக்கிறார்கள். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தான் எலிமினேஷன் அறிவிக்கப்படும். ஆனால், இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என்பதால் சனிக்கிழமை டபுள் எவிக்ஷனில் வெளியேறிய முதல் போட்டியாளரின் பெயர் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் வெளியேறி இருக்கும் ராமின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களின் பெயர் நாளை அறிவிக்கப்படும்.

ஆயிஷா வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவரை விட weak போட்டியாளர்களாக இருக்கும் adk மற்றும் ஜனனி இந்த வாரம் காப்ற்றப்பட்டு இருக்கின்றனர். இதனால் இது மக்கள் முடிவல்ல விஜய் டிவி எடுத்த முடிவு என்று ஆயிஷாவின் ரசிகர்கள் புலம்பி கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வாரம் முழுதும் ஆயிஷாவை பெரும்பாலும் 1மணி நேர எபிசோடில் அதிகம் காட்டப்படவில்லை என்றும் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் கூட ஆயிஷாவின் Performance மட்டும் 1மணி நேர எபிசோடில் காட்டப்படவில்லை என்றும் ஆயிஷாவின் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆயிஷாவின் வெளியேற்றத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Advertisement