அப்போ சோம்யா இனைய உங்களுக்கு ஓகேவா – ரசிகரின் கேள்விக்கு ரம்யா பாண்டியன் தம்பி கொடுத்த ஷாக்கிங் பதில்.

0
52858
ramya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக லவ் ஸ்டோரி என்பது இருக்கும். இந்த சீசனில் ஆரம்பத்தில் பாலா – கேபி லவ் கெமிஸ்ட்ரியை உருவாக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தது, அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இதை தொடர்ந்து ஷிவானி – பாலா காதல் கதை ஓடியது. ஆனால், பாலா தனக்கு காதல் எல்லாம் இல்லை என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். அதிலும் சமீபத்தில் Freeze Task -ல் ஷிவானியின் அம்மா உள்ளே சென்ற போது ஷிவானிக்கு அவர் விட்ட டோஸில் பாலா பக்கம் தலைவைத்தே படுக்காமல் இருந்து வருகிறார் ஷிவானி. இந்த சீசனில் பெரிதாக எந்த ஒரு லவ் டிராக்கும் எட்டப்படவில்லை என்பது தான் உண்மை.

-விளம்பரம்-

ஆனால், சமீபத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் பிக் பாஸ் வீட்டுக்கு என்று வந்த பின்னர் சோம் சேகருக்கும் ரம்யாவிற்கு முடிச்சி போட்டு பேச ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள். அதே போல சோம் – ரம்யா இருவருக்கும் சாக்லேட் மேட்டர் முதலே ஒரு விதமான கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று பலரும் பிக் பாஸ் வீட்டில் கிளப்பிவிட்டு இருந்தனர்.அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரசு பாண்டியன் சோம் சேகரை ‘மச்சான்’ என்று அழைத்தது தான்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் Freeze Task துவங்கி இருந்தது. . இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.இது நாள் வரை சண்டை சச்சரவு என்று போய்க்கொண்டு இருந்த பிக் பாஸ் வீட்டில் இந்த டாஸ்க்கிற்கு பின்னர் தான் கொஞ்சம் ஜாலியாகவும், எமோஷனலாகவும் சென்று கொண்டு இருந்தது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி ரம்யாவை சந்திக்க அவரது தாயும் சகோதரரும் வந்திருந்தார், அப்போது முதலில் பாலாஜியுடன் கையை குலுக்கி ஹாய் பிரதர் என்று சொன்ன ரம்யாவின் சகோதரர், பின்னர் சோம் சேகரை ஹாய் மச்சான் எப்படி இருக்க என்று கேட்டிருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘என்னடா நடக்குது’ என்ற மைண்ட் செட்டில் தான் ஷாக்காகினார்கள். இப்படி ஒரு நிலையில் ரம்யா பாண்டியனின் சகோதரர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்து சோம் சேகருடன் நேரத்தை கழித்து நன்றாக இருந்தது. தங்கமான மனுஷன் என்று கூறி இருந்தார் . இந்த பதிவிற்கு கீழ் சோம் சேகரின் ரசிகர் ஒருவர், அப்போது அவர்கள் இருவரும் ஒன்று சேருவதை நீங்கள் விருப்புகிறீர்களா என்று கேட்டதற்கு அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement