ஆரிகிட்ட ஒரு பேச்சு, அனிதாகிட்ட ஒரு பேச்சு, ஆஜீத் கிட்ட ஒரு பேச்சு – இந்த குறும்படத்தால் ரம்யா மேல இருந்த நம்பிக்கையே போச்சு .

0
9940
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 11 நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போலவே இந்த வாரம் அனிதா தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் ஆரி காப்பாற்றப்பட்டு இருந்தார். நேற்றய நிகழ்ச்சியில் யார் வெளியேறப்போகிறார்கள் என்று பல டிஸ்கஷன் நடந்தது. நேற்றய நிகழ்ச்சியில் ரம்யாவிடம் ஆரி, இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று கேட்டதற்கு ரம்யா, அனிதா பெயரை கூறி இருந்தார். ஆனால், இதே ரம்யா, தான் கடந்த வெள்ளிக்கிழமை Unseen வீடியோவில் அனிதாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆரி தான் இந்த வாரம் வெளியே போவார் , ஆரி, இந்த வாரம் வெளியில் செல்வதால் தான் அவருக்கு 10 ரூபாய் பரிசு கொடுத்து இருகாங்க என்று காமெடி செய்து இருந்தார் ரம்யா பாண்டியன்.

அந்த வீடியோ கூட சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதே போல நேற்றய நிகழ்ச்சியில் ஆரி காப்பாற்றப்பட்ட பின்னர் ரம்யா பாண்டியன் ஆஜீத்திடம் பேசிக்கொண்டு இருக்கும் போது கேப்ரில்லாவை கண் காண்பித்து இவர் தான் வெளியே போகப் போகிறார் என்று கூறியிருந்தார் ரம்யா. ஆனால், அதற்கு ஆஜீத் கண்டிப்பாக இல்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரே சமயத்தில் ஆரி, அனிதா, ஆஜீத் ஆகிய மூவரிடமும் ரம்யா பாண்டியன் மாறி மாரி பேசியுள்ளார் .

-விளம்பரம்-
Advertisement