‘இவ்வளவு மோசமாக பேசினாரா பிரதீப்’ கமலிடம் பிரதீப் சொன்னதாக ரவீனா சொன்ன அந்த Mute செய்யப்பட்ட வார்த்தை இதுதானா? உளறிய ரவீனா.

0
351
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 65 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரதீப் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. மற்ற போட்டியாளர்கள் அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது இந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது.

-விளம்பரம்-

ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ், பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். பின் பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை மாயா &கோ கிளப்பி விட்டார்கள். ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ, 24 மணி நேர நேர நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை.

- Advertisement -

பிரதீப் ரெட் கார்ட்:

பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும். இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா&கோ தான் முக்கிய காரணம் என்றாலும் கமல் இந்த விஷயத்தை தீர விசாரிக்காமல் செயல்பட்டுவிட்டார் என்பதே பலரின் வாதமாக இருந்து வருகிறது.

கமல் விமர்சனம்:

மேலும், பிரதீப் மீண்டும் பிக் பாஸில் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். அதோடு கமலை கடுமையாக விமர்சித்தும் பல விதமான பதிவுகளும் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டது குறித்து தான் சோசியல் மீடியாவில் பெரும் விவாதமாகவே இருந்தது. சமீபத்தில் கூட கமலின் பிறந்த நாளில் இதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

ரவீனா-பிரதீப் சர்ச்சை:

இந்த நிலையில் கமல், பிரதிபிடம் விளக்கம் கேட்காமல் வெளியில் அனுப்பியதற்கு குறித்த காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரதீப் குறித்து ரவீனா, என்னுடைய அர்ணா கயிறு குறித்து பிரதீப் பேசியிருந்தார் என்று சில வார்த்தைகளை மியூட் செய்திருந்தார்கள். ரவீனா சொன்னதை கேட்டு கமல் கோபம் அடைந்து இருந்தார். ஆனால், பிரதீப் என்ன சொன்னார்? தான் தெரியவில்லை. தற்போது 24 மணி நேரம் எபிசொட்டில் சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

பிரதீப் செய்த வேலை:

அதில், ஒரு டாஸ்க் நடக்கும் போது நான் ஜெயித்தால் கக்காவை வாயில் வாங்கிக்கிறியா என்று பிரதீப் ரவீனாவை பார்த்துக் கேட்டு இருக்கிறார். அதற்கு சீச்சி என்று ரவீனா சொல்லி இருக்கிறார். இதை தான் மியுட் செய்து இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலருமே பிரதிப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை. அதேபோல் கேமரா முன்பு பெண்களுடைய ஆடைகள் விலகுவதை குறித்து சுட்டிக்காட்டி சரி செய்ய மோசமாக பிரதீப் பேசி இருக்கிறார். இதுவும் தவறான செயல் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement