உங்கள் கணவர் எங்கு இருக்கிறார், திருமணம் செய்துகொள்ள போறீங்களா – ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரேஷ்மா.

0
1823
reshma
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. அதுவும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பெரும் வெற்றியடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகளும் பங்கு பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரேஷ்மாவும் ஒருவர். “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

-விளம்பரம்-

நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார்.இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை ஆயிரமா ? அவரே சொன்ன தகவல்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை ரேஷ்மா ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது, ரசிகர்கள் சிலர், உங்கள் கணவர் எங்கே என்று கேட்டதற்கு ‘நல்ல கேள்வி . ஆனால் ்எனக்கு யாரும் அப்படி இல்லை என்று பதில் அளித்தார். மேலும், நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகிறீர்களா என்று கேட்டதர்க்கு இல்லை என்று பதில் அளித்துள்ளார். சமீபத்தில் கூட இவருக்கு மூன்றாவது திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்திகள் பரவியது . ஆனால், அதனை மறுத்த ரேஷ்மா, நீங்கள் என்னைப் பற்றியும் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கூறும் அனைத்தும் சரியானது இல்லை. மேலும், நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள இல்லைஎன்று கூறியிருந்தார்.

நடிகை ரேஷ்மாவின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சம்மதத்துடன் நன்றாக கோலாகலமாக நடைபெற்ற திருமணம் ஆகும். ஆனால், சில வருடங்களிலேயே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின்னர் சில காலங்களில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.அதற்கு பின்னர் இவர் தன் கணவருடன் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார். பின் இரண்டாவது திருமணத்திலும் இவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது.அதனால் அவருடனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

-விளம்பரம்-

Advertisement